நடிகரும் இயக்குநருமான தியாகராஜனின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அந்தகன்'. இத்திரைப்படம் 'அந்தாதூன்' என்ற ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
இத்திரைப்படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் அற்புதமாக நடிகர் பிரசாந்த் நடித்திருக்கிறார்.
சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு ,வனிதா விஜயகுமார் மற்றும் மறைந்த நடிகர் மனோபாலா உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
அந்தகன் திரைப்படம் நேற்றைய தினம் வெளியாகிய நிலையில்
மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
நீண்ட ஆண்டுகளுக்குப் பின்பு நடிகர் பிரசாந்திற்கு நல்ல Come Back கொடுத்த திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.
மேலும் இத்திரைப்படத்தில் நடிகை சிம்ரன் மற்றும் ஊர்வசியின் நடிப்பு அபாரம் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
நடிகர் பிரசாந்த், நடிகை சிம்ரன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் திரையரங்கில் காண்பிக்கப்பட்ட சிறப்புக் காட்சியில் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட நடிகர் பிரசாந்த், தன்னுடைய அப்பாவும் இத்திரைப்படத்தின் இயக்குநருமான தியாகராஜனிற்கும், படக்குழுவினருக்கும் மற்றும் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
அந்தகன் திரைப்படத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பிரசாந்தின் இரசிகர்கள், தற்போது மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.