இந்தியாவின் பெங்களூரு, கோரமங்கலம் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற சவூதி அரேபியாவுக்கு எதிரான ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் சவூதி அரேபியாவை இலங்கை 118 - 5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றுள்ளது.
இலங்கை முதலாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியை 27 - 2 என்ற புள்ளிகள் கணக்கில் தனதாக்கியது. இரண்டாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியில் இலங்கை 32 - 0 என தனதாக்கியது.
இதற்கு அமைய இடைவேளையின்போது இலங்கை 59 - 2 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது. இடைவேளைக்குப் பின்னர் மூன்றாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியையும் இலங்கை 32 - 1 என தனதாக்கிக்கொண்டது.
ஒட்டுமொத்தமாக 118 - 5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை மிக இலகுவாக வெற்றிபெற்றது. இலங்கை அடுத்து இந்தியாவை எதிர்த்தாடவுள்ளது.