விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், மனோபாலா, ஓவியா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தத் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து திரைப்படத்தின் இரண்டாம் பாகம், 'கலகலப்பு-2 என்ற பெயரில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது.
இதில் ஜீவா, ஜெய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில் திரைப்படத்தின் மூன்றாம் பாகமான 'கலகலப்பு 3' வெளியாகவுள்ளதாக நடிகை குஷ்பு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விரைவில் 'கலகலப்பு 3' உருவாக இருப்பதாகவும், நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.