ஏ.ஆர்.ரஹ்மானின் 29 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், ஒஸ்கார் விருது வென்றவருமான ஏ.ஆர். ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
இந்தப் பிரிவு தொடர்பாக அவர்களது 21 வயது மகன் அமீன், ‘தந்தை - தாய் குறித்து பரவி வரும் அவதூறுகள் வருத்தம் அளிக்கின்றது’ என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனிடையே தன்னைப்பற்றி அவதூறான வீடியோக்களை பதிவிடுவோர், சட்டபடி தண்டிக்கப்படுவர் எனக் குறிப்பிட்டு ஏ.ஆர்.ரஹ்மான்
Notice ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் தன்னுடைய விவாகரத்து தொடர்பாக உண்மைக்குப் புறம்பான, அவதூறான தகவல்களைக் கொண்ட சமூக ஊடகப் பதிவுகள், செய்திக் கட்டுரைகள், யூடியூப் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் ஏ.ஆர்.ரஹ்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.