நடிகர் தனுஷ் 'பவர் பாண்டி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் தனது 50 ஆவது திரைப்படமான 'ராயன்' திரைப்படத்தை இயக்கி நடித்தார்.
'ராயன்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தனுஷ் 'இட்லி கடை' என்ற திரைப்படத்தையும் இயக்கி நடித்து வருகிறார்.
இந்தத் திரைப்படத்தின் மூலம் தனுஷின் சகோதரியின் மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மெத்யூ தோமஸ்,வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலாக 'கோல்டன் ஸ்பாரோ' என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'காதல் பெயில்' என்ற பாடல் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.