நடிகர் ரஜினிகாந்தின் 74ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 300 கிலோ கருங்கல்லில் ரஜினிக்கு சிலை செய்து கோவில் அமைத்து இரசிகர் வழிபட்ட புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12 ஆம் திகதி , ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று ரஜினி இரசிகர்கள் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரை சந்திப்பது வழக்கமாகவுள்ளது.
அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கோவில் கட்டி, ரஜினிகாந்துக்கு சிலை வைத்துள்ளார் ரஜினி இரசிகர் ஒருவர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் சிறுவயது முதலே ரஜினி இரசிகராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்காக திருமங்கலத்தில் கோவில் ஒன்றைக் கட்டி 300 கிலோ எடையிலான கருங்கல்லால் ரஜினிகாந்திற்கு சிலை அமைத்துள்ளார் கார்த்திக்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.