பொதுவாக சருமத்தில் ஏற்படும் வறட்சிக்கு நீர்க்குறைவு மட்டுமின்றி, அதிகப்படியான காற்றும், அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்கள் சருமத்தில் படுவதும் தான் காரணம். இத்தகைய பிரச்சினை குளிர்காலங்களில் மட்டுமின்றி, கோடைகாலத்திலும் ஏற்படும்.அதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.
தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து சருமத்தில் தடவி வந்தால்,சருமத்தின் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.
பாதாம் பருப்பை அரைத்து அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து சருமத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர சருமம் பளப்பளப்பாகும்.
உருளைக்கிழங்கு சாறுடன் கடலைமா சேர்த்து நன்கு கலந்து சருமத்தில் தடவி வந்தாலும் முகம் பொலிவு பெறும்.
கஸ்தூரி மஞ்சள் தூளை பன்னீரில் கலந்து வெயிலில் வைத்து சூடாக்கி, அதை சருமத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் அவை வந்த அடையாளங்கள் மறைந்து விடும்.
பெண்கள் கஸ்தூரிமஞ்சள்,உருளைக்கிழங்கு, ஆகிய இரண்டையும் அரைத்து சருமத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.
ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டருடன் ஒரு தேக்கரண்டி கடலை மா அதனுடன் கற்றாழை சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து சருமத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.
மேற்குறிப்பிட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி அழகினை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.