Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
25
இயற்கையான முறையில் சருமத்தைப் பாதுகாப்பது எப்படி ?

SooriyanFM Gossip - இயற்கையான முறையில் சருமத்தைப் பாதுகாப்பது எப்படி ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

107 Views
நமது சருமம் வெளிப்புறத்திலிருந்து மட்டுமல்லாது உட்புறத்திலிருந்தும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மாசுபாடு, சருமப் பராமரிப்புப் பொருட்கள் போன்ற வெளிப்புற காரணிகளாலும், நமது உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து போன்ற உட்புற காரணிகளாலும் நமது சருமம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இத்தகைய பாதிப்புக்களில் இருந்து எம்மைப் பாதுகாக்க உதவும் மிக எளிய வழிமுறைகளைப் பார்ப்போம்.

குளிர்ந்த காலநிலையின் போது சரும அரிப்புக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு இயற்கையான Moisturizer ஆகும். இது வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது.

மேலும், இது பக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. குளிர்ந்த காலநிலையில் உணர்திறன் வாய்ந்த சருமம் உட்பட அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றதாக தேங்காய் எண்ணெய் அமைகிறது.

குளிர்ந்த காலநிலையில் ஏற்படும் நீரிழப்பைக் கட்டுப்படுத்த சருமத்தை ஈரப்பதமாக்குவது அவசியமாகும். இதற்கு குளித்த உடனேயே நறுமணம் இல்லாத Moisturizer ஐ பயன்படுத்தலாம். இதன்மூலம் ஈரப்பதத்தை அடைக்கலாம். இவை சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

ஓட்ஸ் குளியல் இயற்கையான அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டதாகும். இது சரும எரிச்சலைத் தணிக்க உதவுகிறது.
கற்றாழை ஜெல்லில் உள்ள சருமத்தை ஆற்றும் பண்புகள் வீக்கமடைந்த சருமத்தை அமைதிப்படுத்தவும், அரிப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

எனவே மேற்குறிப்பிட்டுள்ள இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி சருமத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வோம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top