Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
24
மறையப் போகும் சனிக்கோளின் வளையங்கள் !

Gossip Sooriyan Fm - மறையப் போகும் சனிக்கோளின் வளையங்கள் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

137 Views
சனிக்கோளின் வளையங்களை இனிமேல் பார்க்க முடியாது. ஆனால் இதற்குக் காரணம் அழிவோ மாற்றமோ இல்லை. சனிக் கிரகம் சூரியனை 29.4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி முடிக்கிறது.

இது வெறும் ஒரு மாயைதான். "ring plane crossing" என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு ஒவ்வொரு 13 முதல் 15 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே ஏற்படுகிறது.

ஒவ்வொரு கோளும் தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனையும் தனிப்பட்ட அச்சில் சுற்றிவருவதும் நமக்குத் தெரியும். கிட்டத்தட்ட ஒரு பம்பரம் சுற்றுவதுபோலதான் இதுவும்.

அப்படி சனியும் தனக்கான தனித்துவ அச்சில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது, சனி சுற்றும் நிலைகள் அவ்வப்போது மாறும்.

அதை நாம் காணும் கோணங்களும் மாறும். இந்த மாற்றம்தான் காட்சி மாயைகளுக்குக் காரணம். சனியைச் சுற்றி ஏராளமான பனிப்பாறைகள், பாறை துகள்கள் மிதந்துகொண்டு இருக்கின்றன.

இவை தான் கூட்டாக நமக்கு ஒரு வளையம் போலவும் தட்டுப் போலவும் தெரிகிறது. சனி, பூமியுடன் தற்போது 9 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது. அதனால் நமக்கு இப்போது அந்த வளையம் தெரிகிறது.

பூமியிலிருந்து சனி விலகிச் சென்றதால், சனியின் அச்சு அதன் தற்போதைய சாய்ந்த நிலையில் இருந்து செங்குத்து நிலையைப் பெற்றுள்ளது.

அதாவது பூமியும் சனியும் ஒரே கோணத்தில் இருக்கும். இந்த நேரத்தில் சனியைச் சுற்றி இருக்கும் பாறைக்குழுக்கள் நிறைந்த வளையம் பரவலாக இல்லாமல் பூமிக்கு இணையாக ஒரு மெல்லிய கிடைமட்டக் கோடு போல தோற்றமளிக்கும்.

இது இந்த கட்டமைப்பை பார்ப்பதற்கு மிகவும் மெல்லியதாக மாறும். இந்தக் காட்சி மாயை காரணமாக 2025 இல் இருந்து சனியின் வளையம் நம் கண்ணனுக்கு புலப்படாது.

இந்த நிகழ்வு 2032 வரை நீடிக்கும். அதன் பின்னர் தான் வளையங்களின் அடிப்பகுதி நமது கண்களுக்கு வெளிப்படும் என்று அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.

Space.com-இன் தகவலின் படி , மத்திய வடக்கு அட்ச ரேகைகளில் வசிப்பவர்களுக்கு, சனி ,சூரியனுக்கு மிக அருகில் தோன்றும், அதே நேரத்தில் மத்திய தெற்கு அட்சரேகைகளில் வசிப்பவர்களுக்கு வளையங்கள் இல்லாமல் கிரகத்தைப் பார்க்க சிறந்த வாய்ப்புகள் இருக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top