Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
04
சதகுப்பைக் கீரை தரும் மருத்துவம்.

SooriyanFM Gossip - சதகுப்பைக் கீரை தரும் மருத்துவம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

128 Views
“உணவே மருந்து, மருந்தே உணவு” என்பது தமிழர்கள் கண்டுபிடித்த சித்த வைத்திய மருத்துவ முறையின் அடிப்படை கொள்கையாகும். அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகள் பல வகையான தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் கலவையாகவே இருக்கின்றன. மனிதர்களின் உணவுப் பட்டியலில் கீரைகள் முக்கிய இடம் பெறுகின்றன. கீரைகள் உணவாக மட்டுமில்லாமல் மனிதர்களின் சீரான உடல் நலத்திற்கு அரு மருந்தாகின்றன. அந்த வகையில் சதகுப்பைக் கீரை பற்றிய மருத்துவ குணங்களை அறிந்துகொள்வோம். பார்ப்பதற்கு சீரகச் செடியைப் போல் தோற்றமளிக்கும் சதகுப்பைக் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த செடி ஆகும். இதற்கு சோயிக்கீரை, மதுரிகை எனப் பெயர்களும் உண்டு.

கர்ப்பப்பைக் கோளாறு குறைய சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கசாயமாக்கிக் குடித்தால் கர்ப்பப்பைக் கோளாறு குறையும்.
 
இரத்த அழுத்த நோய் குறைய கருங்காலிப்பட்டை, சதகுப்பை, சீரகம், ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து தூள் செய்து சுண்டவைத்து சாப்பிட இரத்த அழுத்த நோய்  குறையும்.

இரத்தச்சோகை குறைய சதகுப்பை விதைகளை பொடி செய்து கொத்தமல்லி இலைச்சாற்றில் கலந்து குடித்துவந்தால் இரத்தச் சோகை குறையும்.

சதகுப்பை இலைகளை உலர்த்தி, காய வைத்து, பொடி செய்து அதனுடன் மிளகு, சுக்கு, சதகுப்பை, ஏல அரிசி, தேன் அனைத்தையும் இடித்து வடிகட்டி, வடிகட்டிய தூளை தேன் சேர்த்துச் சாப்பிட்டால் முறையாக பசி ஏற்படும்.
 
ரோஜாப்பூ மொட்டு மற்றும் சதகுப்பை ஆகியவற்றை இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்திருந்து வடிகட்டி குடித்தால் வயிற்று வலி குறையும். சதகுப்பை இலைகளை சமைத்துச் சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் குறையும்.
 
இவ்வாறு பல மருத்துவக் குணங்கள் கொண்ட சதகுப்பைக் கீரையை மேற் குறிப்பிட்டுள்ளவாறு பின்பற்றி உடல் ஆரோக்கியத்தைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top