'அந்தகன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நடிகர் பிரஷாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது.
அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை என அனல் பறக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் அனைத்தையும் எழுதி இயக்கவுள்ளார் இயக்குநர் ஹரி.
நடிகர் பிரஷாந்துடன் இணைந்து, இயக்குநர் ஹரி இயக்கிய அவரது அறிமுக திரைப்படம் 'தமிழ்'. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து பட்டி தொட்டி எங்கும் பல திரையரங்குகளில் நூறு நாட்களுக்கு மேலாக ஓடி, வசூலை வாரிக்குவித்தது.
அதன்பின் இயக்குநர் ஹரி, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வந்ததோடு, தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை மட்டுமே இயக்கி, வெற்றி இயக்குநர் என தனி முத்திரையைப் பதித்தார்.
தமிழ் சினிமாவின் பல முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்கும் இந்தத் திரைப்படத்தில், பல முன்னணி நட்சத்திரங்கள் இணையவுள்ளார்கள் எனவும் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.