2004ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடித்த 'ஆர்யா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சுகுமார். சுகுமாரின் தனிப்பட்ட படைப்பாற்றல், தனித்துவமான கதை சொல்லும் திறமை ஆகியவற்றால் சுகுமார் தெலுங்கு திரையுலகில் முக்கியமான இயக்குநராக உருவாகிக் கொண்டார்.
அதன் பின்பு சுகுமார் மற்றும் அல்லு அர்ஜூன் ஆகியோரின் கூட்டணியில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றிபெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இந்தத்திரைப்படத்தின் இரண்டு பாகங்களுமே வசூலிலும் சாதனை படைத்தது.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் இயக்குநர் சுகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில், "தமிழில் நீங்கள் திரைப்படம் எடுத்தால் எந்த நடிகர்களுடன் வேலை செய்வீர்கள்?" என்ற கேள்விக்குப் பதிலளித்த சுகுமார், "எனக்கு தளபதி விஜய்யை வைத்து திரைப்படம் இயக்க மிகுந்த ஆசையாக உள்ளது. அவர் நடித்த திரைப்படங்களை நான் விரும்பிப் பார்க்கின்றேன். அவர் மிகுந்த நுணுக்கத்துடன் தனது கதாபாத்திரங்களைக் கையாள்கின்றார்" எனக் கூறியுள்ளார்.