செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் IVF முறையைப் பயன்படுத்தி உலகின் முதல் குழந்தையை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமான Conceivable Life Sciences இந்த இயந்திரத்தை உருவாக்கியுள்ளது.
ICSI-இல், ஒரு விந்தணு நேரடியாக ஒரு முட்டையில் செலுத்தப்படுகிறது.
இந்த தொழிநுட்பத்தில் மெக்சிகோவின் குவாடலஜாராவில் உள்ள ஹோப் IVF -இல் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. IVF சிகிச்சையில் ஈடுபட்டிருந்த 40 வயது பெண் ஒருவர் தானியங்கி அமைப்பு மூலம் கர்ப்பமானார்.
இந்த செயல்முறையில் ஒரு கரு ஆரோக்கியமான பிளாஸ்டோசிஸ்டாக உருவாகிறது. பின்னர் அது உறைந்து மாற்றமடைவதன் விளைவாக ஆண் குழந்தை பிறக்கிறது.
மேலும் இதில் AI மூலம் விந்தணுவைத் தேர்ந்தெடுப்பது, Laser மூலம் அதை நிலைப்படுத்துவது மற்றும் முட்டையில் செலுத்துவது ஆகிய செயன்முறைகள் அடங்குகின்றன.