புளி சுவைக்காக மட்டுமல்ல, பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது.
புளி எலும்புகள் தேய்மானத்தைக் குறைக்கும் தன்மையுடையது. அதனால், எலும்புகளின் தேய்வால் உண்டாகும் மூட்டுவலி விரைவிலேயே கட்டுக்குள் வரும். 100 கிராம் புளியில் ஒரு நாளைக்கு நமக்குத் தேவைப்படுகிற இரும்புச்சத்து முழுமையும் கிடைக்கிறது.
உடலில் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கும் சக்தி கொண்ட புளி அஜீரணக் கோளாறுகளை நீக்குவதுடன் கால்களில் உண்டாகும் வீக்கத்தையும் குறைக்க உதவுகின்றது.
ஒரு வாணலியில் இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணெய் விட்டு புளி இலையையும், பூவையும் ஒவ்வொரு கைப்பிடி அளவு சேர்த்து நன்றாக வதக்கி, மிதமான சூட்டில் முட்டிகளில் ஒத்தடம் கொடுத்தால் முட்டி வலியும் வீக்கமும் குறையும்.
இரண்டு கப் நீரில் ஒரு கைப்பிடி அளவு புளி இலையை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.
புளியம்பூவை ரசம் வைத்து அருந்தினால் நீர்க்கடுப்பு,உடல் உஷ்ணம்,வயிற்றுப்போக்கு என்பன விரைவாகக் குணமாகும்.