கொள்ளு ஒரு தானிய வகையாகும். இது தட்டையாக கருப்பு மற்றும் கபில நிறத்திலும் காணப்படும்.
கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச்சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.
கொள்ளில் புரதச் சத்து நிறைந்துள்ளதால், நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது.
இரவில் ஒரு கைப்பிடி கொள்ளை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டு வந்தால், உடல் எடை விரைவில் குறையும்.
கொள்ளை நாம் தொடர்ந்து உட்கொண்டால், நம் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
கொள்ளை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, துவையலாகவோ அல்லது இரசம் செய்தோ சாப்பிட்டு வந்தால், உடல்வலி, ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினைகள் சரியாகும்.
சுவாசத் தொந்தரவு நீங்கும். காய்ச்சலையும் குணமாக்கும்.