நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பொருட்களில் ஓன்று பச்சை மிளகாய். சிலர், பச்சைமிளகாய் காரம் என்பதால் ஒதுக்குவதுண்டு. அவ்வாறு பச்சை மிளகாயை ஒதுக்குவதைத் தவிர்த்து உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள் பற்றிப் பார்ப்போம்.
பொதுவாக பச்சை மிளகாயை நன்கு மென்று சாப்பிட்டால் வாயில் உமிழ் நீர் அதிகம் சுரக்கும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். இந்தப் பச்சை மிளகாயில் விற்றமின் C அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
பச்சை மிளகாயில் பொற்றாசியம்,மக்னீசியம், இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் சீரான இதயத் துடிப்பிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பவர்கள் பச்சை மிளகாய் அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
பச்சை மிளகாயில் சிலிகான் சத்து அதிகம் இருப்பதால், தலையில் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி முடி உதிர்வதை குறைக்க உதவுகிறது .
பச்சை மிளகாயில் விற்றமின் E அதிகம் உள்ளமையினால் இது சருமத்தில் எண்ணெய் சுரப்பதற்கு காரணமாக அமையும். அதனால் காரமான உணவைச் சாப்பிட்டால் நல்ல ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்.
பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்தக் குணத்தினால் சரும தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கின்றது.