சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது இடம்பெற்றுள்ள வீரர்களில் 70 சதவீத வீரர்கள் அடுத்த ஆண்டு IPL தொடரில் இடம்பெற மாட்டார்கள், அவர்கள் அணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் " சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த ஆண்டு இடம் பெற்றுள்ள வீரர்களில் 70 சதவீத வீரர்கள் அடுத்த ஆண்டு விளையாட மாட்டார்கள்.
துடுப்பாட்ட வீரர்களும் பந்து வீச்சாளர்களும் இந்த ஆண்டு CSK அணியில் ஒன்றுமே செய்யவில்லை. CSK இதுபோல விளையாடி இதுவரை நான் பார்த்ததே இல்லை.
CSK அணி மிக மோசமான ஏலத்தை எதிர்கொண்டுள்ளது. சரியான வீரர்களை அந்த அணி வாங்கவில்லை.
இந்த ஆண்டு அந்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அணிக்காக எதுவுமே செய்யவில்லை.
நிறைய பதில்களை அவர்கள் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.