இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 98 ஓட்டங்களால் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 6 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை 1 - 0 என முன்னிலையில் உள்ளது.
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ் தனது அறிமுக இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி
ஆட்டநாயகனானார்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 33.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
ஆனால், சுழற்பந்து வீச்சாளர் விக்னேஸ்வரன் ஆகாஷ் பந்துவீச ஆரம்பித்ததும் பங்களாதேஷின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.
பங்களாதேஷின் கடைசி 9 விக்கெட்டுகள் 69 ஓட்டங்களுக்குள் சரிந்தன.
இதில் 5 விக்கெட்டுகளை ஆகாஷ் கைப்பற்றினார்.