ஐ.பி.எல் 2025 கிரிக்கெட் தொடரில் 52 ஆவது போட்டியில் சென்னை அணியை 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது.
அந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 213 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக விராட் கோலி 62, ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
சென்னை அணியின் பத்திரன 3 விக்கெட்டுகளைப் பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி சார்பாக ஆயுஷ் மாத்ரே அதிகபட்சமாக 94 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
இறுதியில் சென்னை அணி 20 ஓவரில் 211 ஓட்டங்களை மாத்திரம் எடுத்துப் போராடித் தோற்றது. தோல்வி குறித்து பேசிய தோனி “தோல்விக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
பெங்களூரு அணி நல்ல ஆரம்பத்தைப் பெற்ற போது, இடையே நாங்கள் போட்டியை மீண்டும் இழந்தோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். " இந்நிலையில் சென்னை அணி லீக் சுற்றுப் போட்டிகளுடன் வெளியேறியுள்ளது.