பொதுவாக பூக்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்லாமல் நம்முடைய அழகை மேம்படுத்துவதற்கும் பல்வேறு வகையில் உதவுகிறது. அந்த வகையில் சாமந்திப் பூவின் மூலமாகக் கிடைக்கும் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம்.
சாமந்திப்பூவின் இதழ்களை காயவைத்து பொடிசெய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். அடிக்கடி சோர்வு ஏற்படாது. சாமந்திப் பூவை கசாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் கலந்து அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.
எளிதில் கிடைக்ககூடிய சாமந்திப் பூவில் ஏராளமான நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றன. சாமந்திப் பூவை நன்றாகக் காய வைத்து எடுத்து ஒரு கப் வெந்நீர் சேர்த்து தினமும் குடித்தால் உடலுக்குத் தேவையான விற்றமின் C அதிகமான அளவில் கிடைக்கும்.
உடலில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும், அதன் பாதிப்பு முதலில் தலைவலியாகத்தான் வெளிப்படும். இந்தத் தலைவலி நீங்க சாமந்திப்பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி நீங்கும்.
சாமந்திப் பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை சுளுக்கு வீக்கம் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வந்தால் சுளுக்கு வீக்கம் விரைவில் குறையும்.
உடல் சூடானால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடலாம். இத்தகைய உடல் சூடு மாற சாமந்திப்பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு நீங்கும்.
இது கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அத்துடன், செரிமான மண்டலத்தில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்து செரிமானத்தைச் சீராக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.