அவரையில் பல வகைகள் உண்டு. அவற்றுள் கோழி அவரை, சப்பரத்தவரை, கொத்தவரை, சீனி அவரை, காட்டவரை, என பலவகைகள் உள்ளன. அவரையில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் மருந்தும் நிறைந்துள்ளது.
ஒரு கப் அவரையில் ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்குத் தேவையான விற்றமின் C அதிக அளவு காணப்படுகின்றது.
அவரைக் காயில் உள்ள நார்ச்சத்து உறுப்புகளை சீராக இயங்க வைக்க உதவுகின்றது. இதனால் மலச்சிக்கலை இல்லாமல் செய்கிறது.
அவரைக்காய் உடலில் சேர்ந்த கொழுப்புச் சத்தை வெளியேற்றவும் வகை செய்கிறது. இதனால் இதய நாளங்களில் அடைப்புகள் ஏற்படாமல் இதயம் சீராகச் செயற்படுவதற்கும் உதவுகின்றது.
அவரை விதைகளை அவித்துச் சாப்பிடலாம். நல்ல ஊட்டசத்து கொண்ட உணவாக இது திகழ்கிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கும் மற்றும் மலச்சிக்கல் நோய்க்கும் இது மருந்தாகிறது. மேலும், உடலில் சேர்ந்த கொழுப்புச் சத்தை வெளியேற்ற உதவுகிறது. இதனால் இதய நாளங்களில் அடைப்புகள் ஏற்படாமல் இதயம் சீராகச் செயற்படுவதற்கும் உதவுகின்றது.