பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வருகின்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடரின் 10ஆவது பருவத்தின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த மாதம் காஷ்மீர் பஹால்கமில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடையே போர் தீவிரமடைந்திருக்கின்றது. இந்த நிலையிலையே PSL T20 தொடரும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றது.
இதன்படி PSL தொடரில் இன்னும் 8 போட்டிகள் எஞ்சியிருக்க தொடரானது ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.