பிரபல பாடகர் ராகுல் வைத்யா, தன்னை இன்ஸ்டாகிராமில் Unblock செய்ததற்காக விராட் கோலிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
ராகுல் வைத்யா முன்னதாக கோலி மற்றும் அவரது இரசிகர்களை "ஜோக்கர்" என்று கூறி இருந்தார். அதைத் தொடர்ந்து அவரை விராட் கோலி தனது சமூக வலைத்தளத்தில் block செய்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் ராகுல் வைத்யா,விராட் கோலிக்கு நன்றி தெரிவித்து இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பைப் பாராட்டி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில் "என்னை Unblock செய்ததற்கு நன்றி விராட், கிரிக்கெட் இதுவரை கண்டிராத சிறந்த துடுப்பாட்ட வீரர் நீங்கள். நீங்கள் இந்தியாவின் பெருமை. ஜெய் ஹிந்த் " என்று தெரிவித்துள்ளார்.