நடிகர் ரவிமோகன் - ஆர்த்தி தம்பதியரின் பிரிவும், பாடகி கெனிஷாவை 'என்னுடைய வாழ்வில் ஒளியாக வந்தவர் ' என்று ரவிமோகன் சொன்னதும் பரபரப்பு விடயமாக பேசப்பட்டு வந்தது.
ஒரு தந்தையாக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் ' என்று ஆர்த்தியும், அவருக்குப் பதில் அளித்து 'நான் பொன் முட்டையிடும் வாத்தாக நடத்தப்பட்டேன். முன்னாள் மனைவியும் அவரது குடும்பத்தினரும் என்னை அவர்களின் கடனுக்கு ஜாமீன் போட வைத்தனர் ' என்று ரவிமோகனும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டனர்.
இந்த நிலையில், பாடகி கெனிஷா - ரவி மோகன் சர்ச்சைக்கு மத்தியில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், " பெரிய சத்தங்களுக்கு மத்தியில் அமைதியான நம்பிக்கை காத்திருக்கிறது.
இசையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன். காயங்களை பாடங்களாய் ஏற்கிறேன்.
ஆழமான சோகத்தின் நடுவே, மனம் பாடுகிறது. நாளைய விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிக்கிறது " என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.