தமிழகத்திலுள்ள நாமக்கல்லுக்கு அடுத்த, ரெட்டிபட்டி என்ற கிராமத்தில் நடந்து வரும் கோவில் திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு இளைஞர் நாடக நட்பணி மன்றம் சார்பில், மணவாழ்க்கை எனும் சமூக நாடகம் நடந்தது.
அதற்கு சிறப்பு அழைப்பாளராக, பிரபல சினிமா இயக்குனர் பாக்கியராஜ்; மற்றும் மச்சான் புகழ் நடிகை நமீதா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இரவு 10.30 மணிக்கு, நமீதா நாடக மேடைக்கு வந்தார்.
அங்கிருந்த ரசிகர்கள் நமீதாவை பார்த்த மகிழ்ச்சியில் முண்டியடித்துக்கொண்டு அவருடனே மேடையில் ஏறினர்.
அதனால் பாரம் தாங்காமல் மேடை ஒருபுறம் சரிந்தது.
மேடையில் அமர்ந்திருந்த, நமீதா, நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சரிந்து விழுந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நமீதா லேசான காயங்களுடன் காரில் ஏறி ஓட்டம் பிடித்தார். விழாவும் ரத்து செய்யப்பட்டது.
இன்னுமா நமீதா மோகம் இருக்கிறது?