வடக்கு சைபீரியாவின் தீபகற்ப பகுதியான யாமல் பகுதி, ரஷ்யா மற்றும் சைபீரியாவின் எல்லையாக அமைந்துள்ளது.
இயற்கை மற்றும் எரிவாயு அதிகம் உள்ள நிலப்பரப்பு கொண்ட இந்த பகுதியே 'உலகின் கடைசி பகுதி' - End of World என்றும் சமீப காலமாக அழைக்கப்பட்டு வருகிறது.
ஏனெனில் இங்கு கடந்த சில தினங்களுக்கும் மிகப்பெரிய ராட்சத பள்ளம் ஒன்று தோன்றியுள்ளது.இதன் ஆழம் 262அடியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் ஊகித்துள்ளனர்.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், திடீரென இந்தப் பள்ளம் தோன்றியது எப்படி என்பது விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக உள்ளது என்றும் பூமிக்கடியில் உள்ள பாறைகள் இடம் பெயர்வதே இப்பள்ளம் ஏற்பட காரணமாய் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது இதன் ஆழம் குறித்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர். மேலும் இப்பெரும் பள்ளத்தால் உலகத்தின் அழிவின் தொடக்கம் ஏற்பட்டுள்ளதோ? என்று மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
ஏற்கெனவே கடந்த வாரம் ரஷ்யாவில் திடீரென ஏற்பட்ட பனிக்கட்டி மழைப் பொழிவு அச்சம் ஏற்படுத்திய பரபரப்பின் பின்னர் இப்போது இந்தப் பள்ளம்..
ஜெர்மானியர்கள் அதிர்ஷ்டங்கள் தரும் சகுனங்கள், அதிர்ஷ்ட இலக்கங்கள் போன்றவற்றில் நம்பிக்கை உடையவர்கள்.
இம்முறை தமது நாட்டு அணி உலகக்கிண்ணம் வென்றதற்கு 7ஆம் இஇலக்க அதிர்ஷ்டம் ஒரு முக்கிய காரணம் என நம்புகிறார்கள் மகிழ்ச்சியில் திளைக்கும் ஜெர்மானியர்கள்.
தமது 4வது வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்த ஜேர்மனிக்கு எண் 7 அதிர்ஷ்டம் வாய்ந்ததாக இருந்தது எப்படி எனப் பார்ப்போம்...
* ஆண்டு 2014 ஐ கூட்டினால் வருவது 7 ஆகும்
* மாதம் - ஜூலை (7)
* GERMANY என்ற எழுத்துகளின் எண்ணிக்கை 7.
* போட்டி நடந்த நாடு BRAZIL =2+2+1+7+1+3 = 1+6 = 7
* ஜேர்மன் அணி G பிரிவில் போட்டியிட்டது. ஆங்கில அகரவரிசைப்படி G என்பது 7ஆவது எழுத்தாகும்.
* இம்முறை அதிக கோல்களை ஜேர்மன் அணி பெற்றது பிரேசிலுடன் (7 – 1) ஆகும்.
* வெற்றிக் கோலை பெற்றுத் தந்த Mario Gotze மாற்று வீரராக களமிறக்கப்பட்டது 88ஆவது நிமிடத்தில் ஆகும். 8+8 =1+6 = 7
* அவரது பெயரின் முதலெழுத்துகளைக் கூட்டினால் வருவது M + G = 7 ஆகும்.
என்ன அசந்து விட்டீர்களா?
சும்மாவே மோதிக் கொள்கிற அஜித் - விஜய் ரசிகர்களை மேலும் கலவரப்படுத்தும் செய்தியா என்று திகைக்காமல் மேலும் வாசியுங்கள்.
'தல' அஜித் நடிக்கும் புதிய படம் பற்றி நாள்தோறும் புதிது புதிதாய் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கப்படவில்லை.
இப்படத்தில் அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள் என்று தகவல்கள் வந்திருந்தன.
மேலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க நடிகர் அருண் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இப்படத்தில் அருண் விஜய்க்கு என்ன பாத்திரம் என இத்தனை நாட்களாக சஸ்பென்ஸ் நிலவி வந்தது.
ஒருவேளை ஆரம்பம் ஆர்யா போல துணை பாத்திரம் ஏதாவதோ என ஊகங்களும் நிலவியிருந்தன.
இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சியொன்றின் திரைப்பட விருது விழாவில், ‘ஆரம்பம்’ படத்திற்காக விருது வாங்க மேடையேறிய தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அந்த சஸ்பென்ஸை உடைத்தார்.
‘‘அஜித்துடன் இரண்டு படம் செய்கிறோம். ஏற்கெனவே ஒருமுறை கௌதம் மேனனுடன் நான் படம் செய்வதாக இருந்தது. ஆனால், அது இப்போதுதான் கைகூடியிருக்கிறது. அனுஷ்கா, த்ரிஷா நாயகிகளாக நடிக்கிறார்கள். அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார். இன்னும் இப்படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை’’ என்று கூறினார் ஏ.எம்.ரத்னம்.
ஆக.... அருண் விஜய், அஜித்துக்கு வில்லன்தான் என்பது உறுதியாகிவிட்டது!