அண்மைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட விஷயமாக மியான்மார் நாட்டின்
ரோஹிஞ்சா அகதிகள் விவகாரமும், மலேசிய மனிதப் புதைகுழிகளும் காணப்படுகின்றன.
பிரதான செய்தி ஊடகங்களும் இந்த படகு அகதி விவகாரம் பற்றிய கவனத்தை செலுத்தினாலும் சர்வதேச அமைப்புக்களின் நடவடிக்கைகளில் அசமந்தப் போக்கு தொடர்கிறது.
மியன்மாரின் இந்த
ரோஹிஞ்சா அகதிகளின் படகு விவகாரம் மீண்டும் பேசப்பட ஆரம்பிக்க, மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த ரோஹிங்கிய படுகொலைகள் இப்போது நடப்பது போல சமூக வலைத்தளங்களில் பரவலாகத் தகவல்கள் பரப்பப்பட ஆரம்பித்தன..
இதன் பின்னணி விவகாரங்கள் பற்றி ஓரளவுக்கு ஆராயும் நோக்கிலும் தற்போதைய மியான்மாரின் உண்மை நிலை பற்றி தெளிவுபடுத்தும் நோக்கிலும் இந்தக் கட்டுரை..