Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

பிரபல ஹிந்தி இயக்குனர் ராம்கோபால் வர்மா அடிக்கடி தனது டுவிட்டரில் ஏடாகூடமான பதிவுகளை போட்டி மாட்டி கொள்வது உணடு . கோச்சடையான் வெளிவந்த நேரம் தனது டுவிட்டர் தளத்தில், ரஜினிகாந்த்தின் மார்பு பற்றி கிண்டல் செய்யப்போய் பெரிய சர்ச்சையில் மாட்டியிருந்தார்.

ரஜினியின் மார்பு - சர்ச்சையில் ராம் கோபால் வர்மா

ராம்கோபால்வர்மாவின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.இந்நிலையில் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள ஒரு பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்கும் நாளில் பாகிஸ்தான் சிறையில் இருந்த மீனவர்களும், இலங்கை சிறையில் இருந்த மீனவர்களும் விடுவிக்கப்பட்டது குறித்து ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில் சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் மனதில் என்ன நினைத்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பதிவு வெளியிட்டு உள்ளார்.

அதில்,மீனவர்கள் ரிலீஸ் ஆனதில் தனக்கு சிறிதும் மகிழ்ச்சியில்லை. ஏனேனில் அவர்களால் ஆயிரக்கணக்கான மீன்கள் தங்கள் உயிரை இழக்க இருக்கின்றன. என்று எழுதியுள்ளார்.

மேலும் மற்றொரு ட்விட்டில் ‘சோனியாவின் மகள் பிரியங்காவை விட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகள் கவர்ச்சியானவர் என்று எழுதியுள்ளார்.

பிரியங்கா காந்தி 


மரியம் நவாஸ் ஷெரிப்  


இப்போதே இதற்கான எதிர்வினைகள் ட்விட்டர் பக்கங்களில் கிளம்பியிருக்கின்றன.

யார் யார் இனி சட்ட ரீதியில் வம்பிழுக்கப் போகிறார்களோ?
ராம் கோபால் கொஞ்சம் கவனமாகத் தான் இனி இருக்கவேண்டும்.
957 Views
ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருப்பவர்களில் நடிகர் விஜய்சேதுபதியும் ஒருவர். இவர் தங்கள் படங்களில் நடிக்க சம்மதம் கிடைக்காதா என்று சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கூட அலைந்து கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா ஒரு படத்தில் நடிக்கயிருப்பதாக செய்திகள் பரவின. ஆனால் அதுசம்பந்தமாக த்ரிஷாவை அணுகியபோது அவர் மறுத்து விட்டதாக செய்தி பரவியுள்ளது.

இதேபோல், தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் இப்போது டாணாவில் நடிப்பது போன்று அடுத்து தனுஷ் தயாரிக்கும் ஒரு படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தி பரவியது. இப்போது அதுபற்றி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் விஜய்சேதுபதி.



அதில், எனக்கு பிடித்த நடிகர்களில் தனுஷும் ஒருவர். அவரது தயாரிப்பில் நடிக்க சான்ஸ் கிடைத்தால் ரொம்ப சந்தோசமாக ஏற்பேன். ஆனால். அதுசம்பந்தமாக என்னை இதுவரை யாரும் அணுகவில்லை. அதனால் தனுஷ் தயாரிப்பில் நான் நடிப்பதாக வெளியான செய்தி தவறானது என்று விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இவர் மிக வெளிப்படையான நடிகர் என்றும் பட்டதைப் பட்டபடி பேசிவிடுபவர் என்றும் பேச்சு நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.
971 Views
கோச்சடையான் வெளியான பின்பு பல பிரபலங்கள் படம் தொடர்பில் கருத்து வெளியிட்டனர், அந்த வகையில் சிம்பு தனது டுவிட்டர் தளத்தில் படத்தின் கிராபிக்ஸ் சரியாக அமையவில்லை என பதிவேற்றியுள்ளார். அதற்கு சௌந்தரியா சற்றும் கோபப்படாமல் 'நன்றி' சொல்லியிருந்தார்.
 
அடடா என்ன இது இப்படியொரு விஷயம் சப்பென்று முடிந்ததே என்று யோசித்துக்கொண்டிருக்க, சந்தர்ப்பம் பார்த்து சிம்புவுக்கு பதில் அட்டாக் கொடுத்திருக்கிறார் ரஜினி புதல்வி.

 சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டிருந்த சௌந்தர்யாவிடம் 'ஐந்து பேரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கேட்கலாம் என்று கேட்க..... 
உடனே சௌந்தர்யா 'நான் சிம்புவிடம் தயவுசெய்து பாடாதீர்கள்' என கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்லியுள்ளார். 
 
இது சிம்புவை பழிவாங்குவதற்காக செய்த ஒரு செயல் எனவும் இதனால் சிம்பு மிகவும் மனவருத்தப்பட்டார் என சினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
சும்மாவே சிம்பு அந்த மாதிரி.. இப்ப இந்தப் பொண்ணு வேற கிண்டி விட்டிருக்கு.
"எவண்டி உன்னைப் பெத்தான்" ரக பாடல் ஏதாவது பாடிக்கீடி ரஜினியையும் வதைக்கப் போறார் வம்பு.. இல்லை சிம்பு.  
 
 
978 Views
படத்துல என்ன தான் மேக்கப் போட்டு எக்ஸ்ட்ரா அழகா காட்டிக்கொண்டாலும் சின்ன வயசுல எல்லாரும் இயற்கையாவே ரொம்ப அழகு தான்.

அசின் அன்று 


அசின் இன்று



பாவனா அன்று


பாவனா இன்று



பாமா அன்று


பாமா இன்று


குரங்கும் கூட குட்டியில் அழகு என்று சும்மாவா சொன்னார்கள் என்று கோக்கு மாக்கா சொல்லக் கூடாது.
2,310 Views
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் ஆயிரக்கணக்கான படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை 'ஆச்சி' மனோரமாவுக்கு இருதினங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் தனியார்  வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இப்போது இவரது நிலை இன்னமும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்து 48 மணித்தியாலத்திற்கு இவர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருப்பார் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 
 
ஏற்கெனவே ஒரு தடவை மிக அவதிப்பட்டு வைத்தியசாலையிலிருந்து தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியிருந்தார் ஆச்சி.
 
மனோரமாவுக்கு ஏற்கனவே நீரிழிவு, மூட்டுவலி, உடல் உபாதைகள் இருந்ததாகவும் இப்போது இவருக்கு சீறுநீரக பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழ்த் திரையுலகில் தனக்கென நிரப்ப முடியாத ஒரு இடம் கொண்ட மனோரமாவின் உடல்நிலை மீண்டும் வழமைக்கு திரும்ப வேண்டுமென்பதே அனைவரினதும் பிரார்த்தனை.
 
1,075 Views
இலங்கையின் மேல், தென் மேல் பிராந்தியங்களில் பெய்து வரும் கடும் மழையில் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்கள் சிக்கித் திணறுகின்றன.
 
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கூட வெள்ளத்தினால் நிரம்பி வழிகிறது.
 
இதோ தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன வெளியேற்றத்தில் வெள்ளத்தில் விளையாடும் சிறுவர்கள்.




படங்கள் - AFP
7,037 Views
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், பொருளாதார ரீதியில் இன்னமும் பின்னடைவில் இருக்கும் ஒரு நாடு தான் பல்கேரியா. ஐரோப்பிய ஒன்றியத்தின் பல மாற்றங்களை செய்தாலும் இன்னமும் இது ஏழை நாடாகவே இருக்கின்றது.

இதன் தலைநகரான சோஃபியாவில் வசித்து வரும் யாசகர் ஒருவர் தனக்கு கிடைத்த பணத்தை தினமும் அங்கிருந்த ஒரு ஆலயத்திற்கு கொடுத்துள்ளார். மேலும் ஏழை எளியவர்களுக்கும், மடங்களுக்கும் கொடுத்து உதவி வருகிறார்.
தனக்கு இல்லாவிட்டாலும் பிறருக்கு இருப்பதையெல்லாம் கொடுக்கும் இந்த யாசகக் கர்ணன் ஒரு புதிரான

எனவே அங்குள்ள மக்கள் இவரை 'வாழும் புனிதர்' என அழைக்கின்றனர். 100 வயதான இந்த யாசகத் தாத்தா மிகவும் எளிமையான ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இவருடைய இந்த செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விடயம்.
990 Views
பெல்ஜியம் நாட்டில் அறுசுவை விருந்தொன்று  வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்பட்டுள்ளது.
இதிலென்ன விசேஷம்னு நீங்க நினைக்கலாம்.இந்த விருந்து பரிமாறப்பட்ட இடம் தான் விஷேஷம். 

'குடை ராட்டினம்' போன்ற வட்ட வடிவான சாப்பிடும் அறை தயாரிக்கப்பட்டு அந்நகரிலுள்ள உயர்ந்த கட்டிடத்தின் மேலிருந்து க்ரேன்களின் உதவியால் நடுவானில் நிலை நிறுத்தப்பட்டது.

பிரபல சமையற் கலை நிபுணர் ஒருவர் இங்கிருந்து விதம்விதமான உணவுகளை சமைத்து சுடச்சுட பரிமாற வாடிக்கையாளர்களும்  தாம் இருப்பது பூலோகமா மேலோகமா என்று தெரியாமலே அந்நகரின் முழு அழகையும் ரசித்தபடி உணவருந்தியுள்ளனர். இங்கிருந்த அனைவரும் இழுத்து கட்டப்பட்ட பாதுகாப்பு பட்டிகளுடன் அமர்ந்திருந்தமை குறிப்படதக்க ஒரு விடயம்.
981 Views
பல மெகாஹிட் திரைப்படங்களில் வெற்றி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் பிரஷாந்த்.

விஜய், அஜித் எல்லாம் வர முதலே உலகம் முழுவதும் ரசிகர் மன்றங்களோடு, குறிப்பாக ரசிகையர் மன்றங்களோடு கலக்கியவர் Top Star பிரஷாந்த்.

இவரை பிடிக்காது என்று சொல்லியவர்கள் யாருமே இருக்க முடியாது, எந்த சர்ச்சைகளுக்குள்ளும் சிக்காத பிரஷாந்த் கிரகலட்சுமியை திருமணம் செய்து பின்னர் அது பிரச்சினையில் முடிய, விவாகரத்தைப் பெற்று சினிமா வாழ்வில் இருந்தே ஒதுங்கி இருந்தார்.

இவருடைய இரசிகர்கள் திரையில் பிரஷாந்தைக் காணாமல் தவித்தார்கள். எப்போது மீண்டும் இந்த செந்தமிழ் செல்வன் வருவார் என்று காத்திருந்தார்கள்.


சத்தமில்லாமல் மீண்டும் இளமையான ஹீரோவாக புதுப் பொலிவோடு களம் இறங்கியுள்ளார் பிரஷாந்த். சாகசம் திரைப்படத்தில் நாயகி இல்லாமலே நடித்துக் கொண்டிருந்தார்.

இப்பொழுது படக் குழுவின் நாயகி வேட்டையில் சிக்கியிருக்கிறார் அழகுப் ப(பு)துமை தமன்னா.

இப்படத்தை பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்க, பிரஷாந்தோடு ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் ஹிந்தியின் அண்மைக்கால பரபரப்பு நடிகை நர்கீஸ் பக்ரி(Nargis Fakhri ) 


-உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும் அப்பு-
1,365 Views
சர்வதேச சிலை கடத்தலை மையப்படுத்தி உருவாகிகொண்டிருக்கும் திரைப்படம் தான் 'களவு தொழிற்சாலை'. இப்படத்தில் ஜெய்ருத்ரா (கதிர்) – வம்சி கிறிஷ்ணா ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

மும்பையை சேர்ந்த குஷி இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.(யப்பா என்னா ஒரு பெயர்)

முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மு.களஞ்சியம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
கிருஷ்ணசாமியின் இயக்கத்தில், ஹரிஷ் ஜெயராஜிடம் பணியாற்றிய ஷியாம் பென்ஜமின்னின் இசையில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன.

குறிப்பாக படத்தின் க்ளைமெக்ஸ் இல் வரும் 'நொடியிலே உன்னை மாற்றலாம்' என்னும் பாடல் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையும், உத்வேகமும் தரும் வகையில் அமைந்துள்ளதோடு, ஒரு விளையாட்டு மைதானத்தில் கால்பந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் பின்னணியில் ஒரு இளம்பெண் சில தோழிகளுடன் சேர்ந்து ஆடுவது போல் படமாக்கப்பட்டுள்ளது.




இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் 150க்கும் அதிகமான உண்மையான கால் பந்தாட்ட வீரர்கள் இப்பாடல் காட்சிகளில் பங்கேற்றுள்ளனர். இந்த மாதத்தில் உலககிண்ண கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளதால் கால்பந்து ரசிகர்களை இது கவரும் எனவும், இப்பாடல் அவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
1,094 Views
ஐயையோ என்ன நடந்தது இருவரும் நல்லா தானே இருந்தாங்கனு யோசிக்கிறீங்களா? நிஜமா இல்லையாம், படப்பிடிப்புகளுக்காக தான் சிறைக்கு போறாங்களாம்.

இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் தான் புறம்போக்கு.
(பேரே ஒரு மாதிரித் தானே இருக்கு)

'இயற்கை' , 'பேராண்மை' புகழ் எஸ். பி ஜனநாதன் 30 கோடி பட்ஜட்டில் எடுக்கும் படம் இது. இந்த படத்தில் முக்கிய பகுதிகள் சிறைச்சாலையில் தானாம் படமாக்கப்படவிருக்கிறது. இதற்காக எத்தனையோ சிறைச்சாலைகளுக்கு ஏறி இறங்கியபோதும் உயர் பாதுகாப்பு காரணமாக அனுமதி கிடைக்கவில்லையாம்.

இதனால் சென்னையில் இரண்டு கோடி ரூபா செலவில் செட் அமைத்து படபிடிப்புகள்; நடைபெற உள்ளதாம். கிட்டதட்ட 65 நாட்களுக்கு மேல் இந்த செட் சிறைச்சாலையில் படப்பிடிப்புக்கள் நடைபெறும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
951 Views
நடிகர் பிரகாஷ்ராஜ் சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்தில் சக பயணியுடன் சண்டையிட்டுள்ளார். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒன்றும் சினிமாவிற்காக எடுக்கபட்ட கதையல்ல நிஜமாகவே நடந்த கதைதான்.நிஜத்திலும் இவர் வில்லன் தான் என்பதை இப்போது நிரூபித்துள்ளார்.

என்ன நடந்தது தெரியுமா ?
தன்னுடன் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவரோடு சண்டையிட்டது மட்டும் இல்லாமல் இன்னுமொருவரை மிக மோசமான முறையில் திட்டியுள்ளார். அதன் பின் விமான பணியாளர் ஒருவர் இருவரையும் விலக்கி தனித்தனியே அமர வைத்துள்ளார். ஆனால் எதற்காக சண்டையிட்டார்கள் என்ற விடயத்தை அந்த விமான நிறுவனம் தெரிவிக்க மறுத்துள்ளது. திரைப்படத்தில் போலவே நிஜவாழ்விலும் இவர் வில்லனா என்று எல்லோரும் இப்போது கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்.

chellam I love you chellam என்று அவருடைய பாணியில் பின்னர் ஏதாவது பிரகாஷ்ராஜ் சொல்லியிருப்பாரோ!!!!

டவுட்டு 
905 Views
அண்மைய நாட்களில் FACEBOOK ரசிகர் பக்கத்தில் பிரபல நடிகர் ஷாரூக்கானை பின்தள்ளிய சல்மான் கான் என்ற செய்திகள் உலா வந்தன.

இந்த நிலையில் ஷாரூக்கான்,மற்றும் சல்மான்கான் ஆகியோரை பற்றிய ஒரு சுவாரஸ்ய கதையையும் பகிருகிறோம்.

அதாவது சர்வதேச அளவில் இணையத்தில் அதிகமான மக்களை ஈர்த்தவர்களின் பட்டியலில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ஷாரூக்கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் டைம் பத்திரிகை 100 பேர் அடங்கிய இப்பட்டியலை தயாரித்துள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் முதலிடத்தில் உள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இடம்பெற்றுள்ளார்.இப்பட்டியலில் சச்சின் 68-வது இடத்தில் உள்ளார். ஷாரூக்கான் 99-வது இடம் பிடித்துள்ளார். இப்பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தியர்கள் இவர்கள் மட்டும்தான்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் 98 வது இடத்தில் ஷாருக்கானுக்கு ஓரிடம் முன்னே உள்ளார். பாப் பாடகிகள் மடோனா, பியான்சே நோஸல் ஆகியோர் முறையே 3, 4-வது இடத்தில் உள்ளனர். அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 11-வது இடத்தையும், ரஷ்ய அதிபர் பலடிமிர் புட்டின் 27-வது இடத்தையும், செர்பிய டென்னிஸ் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் 61-வது இடத்தையும், போப்பாண்டவர் போப் பிரான்சிஸ் 70-வது இடத்தையும், பிரபல கார் பந்தைய வீரர் மைக்கேல் ஷுமேக்கர் 77-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதேவேளை Instragram என்று சொல்லப்படும் புகைப்பட விரும்பிகளது விருப்புக்குரிய தளமான இந்த தளத்தில் இப்போது முன்னணி நடிகர் அமீர் கானும் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1,045 Views
இந்தியக் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் ஷ்ருதி ஹாசனும் காதலிக்கின்றார்கள்.
இது முன்னர் சில காலம் வதந்தியாக உலா வந்துகொண்டிருந்தாலும் உறுதிப்படவுமில்லை.
இருவரும் வாய் திறக்கவுமில்லை.

எனினும் ரெய்னா விளையாடும் போட்டிகள் குறிப்பாக சென்னை சுப்பர் கிங்க்ஸ் விளையாடும் போட்டிகளுக்கு ஸ்ருதி ஹாசன் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தோனியின் மனைவி சாக்ஷி அருகே ஷ்ருதி அமர்ந்திருந்து போட்டிகளைப் பார்ப்பார்.



ரெய்னாவுக்கு ஷ்ருதி வரும் போட்டிகள் ராசியாக அமைந்திருந்தனவாம்.
எனினும் இப்போது ஷ்ருதி பிஸியாக ஆகிவிட அவர் IPL போட்டிகளுக்கு வருவதில்லை.ஆனால் ரெய்னா கலக்குகிறார்.


ஆனாலும் சும்மா Dating மாதிரி இருந்து இப்போது சீரியசான காதலாக மாறியுள்ளது என்று இரு தரப்பும் சொல்லியிருக்கும் நிலையில் இனி உத்தியோகபூர்வமாக ரெய்னா - ஷ்ருதி இருவரும் அறிவிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

கமலுக்கு மருமகனாக ஒரு கிரிக்கெட் வீரர் வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லைத் தான்.

இதற்கு முதல் ஷ்ருதி நடிகர் சித்தார்த்தையும் ரெய்னா இந்திய அமைச்சர் பிரபுல் பட்டேலின் மகள் பூர்ணா பட்டேலையும் காதலித்து வந்திருந்தனர்.


இதோ பூர்ணாவைத் திருமணம் செய்யபோகிறார் என்றிருந்த நிலையில் திடீரென காற்று ஷ்ருதியின் பக்கம் வீசியுள்ளது.

இருவரும் பிசியாக இருக்கும் நிலையிலும் அடிக்கடி சந்தித்தே வருகிறார்களாம்.
இது பற்றி கமலின் கருத்து எப்படி என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் பல்வேறுபக்கமும் இருக்கிறது.

அதுசரி இன்று சென்னையின் முக்கியமான போட்டி பார்க்க ஷ்ருதி வருவாரா?

2,371 Views
கோச்சடையான் வெளிவர முன்னரே லிங்கா திரைப்படத்தின் ஆயத்தங்கள் எல்லாம் அமர்க்களமாக தொடங்கப்பட்டு, ரஜினியும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்.

மைசூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க வேகமான உருவாக்கி வருகிறது லிங்கா. இந்நிலையில், ரஜினிக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் நம்ம நடிகை அனுஷ்காவும் நடித்து வருவது ஏற்கனவே எல்லோரும் அறிந்த தகவல்.
இப்பொழுது புது தகவல் என்ன என்றால், நம்ம இரசிகர்களுக்கு இந்த விருந்து போதாது என்று ஹாலிவூட் நடிகை ஒருவரையும் லிங்காவில் களம் இறக்கி இருக்கிறார்கள்.


பிரிட்டிஷ் நடிகை லாரென் ஜே எர்வின் (Lauren J Irwin) என்பவர் இதில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்க உள்ளார். இவர் வேக்ரே என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தவர் என்பதும் முக்கியமானது.
கவர்ச்சி கதகளி நடிகை இவர் என்பது இன்னொரு கொசுறுத் தகவல்.

மொத்தத்தில் லிங்காவில் நம்ம இரசிகர்கள் திளைக்கப் போகிறார்கள் என்பது மட்டும் இப்போதே புரிகிறது.
1,161 Views
[1]      «      1662   |   1663   |   1664      »      [1668]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top