Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

கிரிக்கெட்டின் தாய் விளையாட்டுக்கு கோச்சராக நடிக்கிறாராம் நம்ம சமுத்திரகனி, நீங்க குழம்புறது புரியுது .

இதுக்கும் கோச்சரா? அதை இயக்குனரிடம் கேட்டால் படம் பார்த்து தெரிந்து கொள்ளட்டாம் ....பாதிப்படப்பிடிப்பு முடிந்து விட்ட பெட்டிகடைக்கு இன்று விடுமுறை என்ற புதிய படத்தில்தான் இவர் கில்லி விளையாட்டின் கோச்சராக நடிக்கிறாராம்

வித்தியாசமான கதாபாத்திரங்களை சவாலாக தேடிச்சென்று நடித்து அதில் பெயரும் வாங்கியவர் இந்த தனித்துவ இயக்குனரும் சிறந்த குணச்சித்திர நடிகருமான சமுத்திரகனி. அப்போ இந்த படத்திற்கும் சிறந்த நடுநிலைமை வகித்து வெற்றியை தீர்மானிப்பார் என்று நாமும் எதிர்பார்க்கலாம் .

-கந்தப்பன் பிரஷாந்த்-
228 Views

‘ஆச்சி’..!

தலைமுறைகளின் சாட்சியாக உலாவரும் மனோரமா, இன்று தன் இல்லத்தில் ஓய்வில் இருக்கிறார். உடல் நலக் குறைவு காரணமாக வீட்டைவிட்டே வெளியே வராதவரைப் பற்றிய வதந்தி மட்டும் உலகம்  முழுக்கப் பரவுகிறது.

”வாழ்க்கையில எல்லா இன்ப துன்பங்களையும் பார்த்துட்டேன். அதுல, ‘நான் இன்னும் உயிரோடத்தான் இருக்கேன்’னு நானே சொல்ற கொடுப்பினையும் எனக்குக் கிடைச்சிருச்சு. இதுக்கு மேல என்ன இருக்கு தம்பி?” – விரக்தியைக்கூட அத்தனை வாஞ்சை நிரம்பிய குரலில்தான் சொல்கிறார் ஆச்சி.

”என்ன பேசணும் என்கிட்ட..? எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையே தம்பி! நான் என்னனு பேசுறது?” – கைகளைப் பிசைந்தபடி யோசிப்பவர், ஆழ்ந்த அமைதிக்குச் செல்கிறார். திடுக் திடுக்கெனத் தூக்கிப்போட்டதுபோல, நினைவுகளைச் சேகரித்துப் பேசுகிறார்.

”அப்போ தினமும் ஷூட்டிங் இருக்கும். அதிகாலையிலயே எந்திரிச்சு, குளிச்சு முருகனைக் கும்பிட்டுக் கிளம்பிருவேன். விடியக்காலையில போய் விடிய விடிய நடிச்சிருக்கேன். களைச்சுப்போய் வந்தா, வீட்லயும் அவ்வளவு வேலை இருக்கும். இப்போ காலையில எந்திரிச்சா, கொஞ்சம் ஓட்ஸ் குடிக்கிறேன்.

அப்புறம் மதியம் வரை பொழுது போக்கணும். மதியச் சாப்பாடு கொஞ்சம் சாதம். தூங்கி எந்திரிச்சா சாயங்காலம் ஆகிடும். பல்லைக் கடிச்சுட்டே உக்கார்ந்திருந்தா, ராத்திரி டிபன் வந்துரும். நடு நடுவுல மருந்து மாத்திரை. எதையோ பிடிக்கப்போறதா நினைச்சு ஓடிட்டே இருந்த என்னோட வாழ்க்கை, இப்போ பத்து பதினைஞ்சு மாத்திரையில சுருங்கிருச்சு.”

முதல் பாராட்டு!

”பள்ளிக்கூடம் போறப்பவே நான் நல்லா பாடுவேன். செட்டிநாடு பகுதிகள்ல நாடகம் போடுறப்ப ஆண்கள்தான் பெண் வேஷம் கட்டி ஆடுவாங்க; நடிப்பாங்க. மேடைக்குப் பின்னால இருந்து குரல் கொடுக்கவும் பாடவும் மட்டும்தான் பெண்களைப் பயன்படுத்துவாங்க. அப்போ எனக்கு 15 வயசு இருக்கும். ‘அந்தமான் கைதி’னு ஒரு நாடகத்துல மேடைக்குப் பின்னாடி இருந்து நான் பாடினேன்.

‘நல்லா பாடுதே இந்தப் பொண்ணு’னு எல்லாரும் சொல்லவும் நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. அப்படியே மேடை ஏறி நடிக்கும் வாய்ப்பும் வந்தது. ‘யார் மகன்?’னு ஒரு நாடகத்துல நான் ஹீரோயினா அறிமுகம் ஆனேன்.

அந்த நாடகத்துக்குத் தலைமை, இயக்குநர் வீணை எஸ்.பாலசந்தர். நாடகத்தில் என்கூட நடிச்ச ஒரு நடிகைக்கு, எஸ்.பாலசந்தர் கையால் பரிசு கொடுக்கச் சொன்னார் ஒருவர். அப்போ அவர் சொன்னார்… ‘நான் இந்தப் பரிசைக் கொடுப்பதாக இருந்தால், இதில் ஹீரோயினாக நடித்த பெண்ணுக்குத்தான் கொடுப்பேன்’னு சொல்லி என்னை வெளிப்படையாப் பாராட்டினார். அந்த முதல் பாராட்டுத்தான் என் சினிமா பயணத்துக்கான ஆரம்பம்.”

முதல் புகைப்படம்!

”ஆரம்பத்தில் ஒரு நாடகத்துக்கு 10 ரூபாய் சம்பளம் வாங்கினேன். அது 40 ரூபாயாக உயர்ந்த சமயம், புதுக்கோட்டையில் பி.ஏ.குமார்னு ஒருத்தர் ஒரு திரைப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார். அவரே இயக்குநர். எஸ்.எஸ்.ராஜேந்திரன் அண்ணன், தேவிகா, நான்… எல்லாரும் படத்துல நடிக்கிறதுக்காக அவரோட வீட்ல தங்கியிருந்து ரிகர்சல் பார்த்துட்டு இருந்தோம்.

அப்போ 15 வயசுல எனக்கு மேக்கப் போட்டு அவர் எடுத்ததுதான் என் முதல் புகைப்படம். அந்தப் படத்தை அப்புறம் பார்க்கிறப்ப எல்லாம் எனக்கே பொறாமையா இருக்கும். குமார் வீட்டு மாடியில இருந்த குடிசை திடீர்னு எரிஞ்சிருச்சு.

அதை அவர் அபசகுனமா நினைச்சார்போல, ‘நான் சினிமாவே எடுக்கலை. நீங்கள் எல்லாம் கிளம்புங்க’னு அனுப்பி வெச்சுட்டார். அப்போ 15 வயசுல எனக்குப் பழக்கமான எஸ்.எஸ்.ராஜேந்திரன் அண்ணன்தான், சில வருஷம் கழிச்சு என்னை சென்னைக்கு வரவெச்சு கலைஞர் எழுதிய ‘மணிமகுடம்’ நாடகத்தில் ஹீரோயினா நடிக்கவெச்சார்.”


நகைச்சுவை நடிகையாக மாற்றிய கண்ணதாசன்!

”சென்னைக்கு நான் கிளம்புறப்பவே எனக்கு பூபதி பிறந்துட்டான். அவனையும் கைப்பிள்ளையா தூக்கிட்டு வந்துதான் நான் நாடகத்தில் நடிச்சேன். எனக்கு சென்னையில் யாரையும் தெரியாது. எஸ்.எஸ்.ஆர் அண்ணன்தான் அவரது வீட்டு மாடியில் தங்கவெச்சார். ‘மணிமகுடம்’ நாடகத்தை சென்னை, சேலம், வேலூர், குடியாத்தம் போன்ற ஊர்கள்ல மாசக்கணக்கில் நடத்தினோம்.

பல நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. பேரறிஞர் அண்ணாவுக்கு ஜோடியா நடிச்சேன்; ‘உதயசூரியன்’ நாடகத்தில் கலைஞருக்கு ஜோடியா நடிச்சேன். ‘மணிமகுடம்’ நாடகத்தில் என் நடிப்பைப் பார்த்துட்டு, கவிஞர் கண்ணதாசன் ‘மாலையிட்டமங்கை’ படத்தில் என்னை நடிக்கச் சொன்னார்.

ஆனா, அது ஹீரோயின் பாத்திரம் இல்லை… காமெடி ரோல். ‘எனக்கு நகைச்சுவையா நடிக்கத் தெரியாது. நான் இதுவரை நாடகத்தில் ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன்’னு சொன்னேன். அப்போ கண்ணதாசன், ‘நீ சினிமாவுல ஹீரோயினா நடிச்சா ரெண்டு, மூணு வருஷம்தான் ஃபீல்டில் இருக்க முடியும். ஆனா, காமெடி நடிகையா நடிச்சா, ஆயுசுக்கும் நடிச்சுட்டே இருக்கலாம்’னு சொன்னார். நான் சமாதானமாகி நடிச்சேன். இப்போ யோசிச்சா அவர் சொன்னது நூத்துக்கு நூறு சரினு தோணுது.

கடவுள் புண்ணியத்துல சினிமாவில் நல்லா சம்பாதிச்சேன். ஆரம்பத்துல ஆயிரம், ரெண்டாயிரம்னுதான் சம்பளம் கொடுத்தாங்க. முதன்முதலா தேவர் ஃபிலிம்ஸ்காரங்கதான் ‘வேட்டைக்காரன்’ படத்துக்காக 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. அப்போ அது ரொம்பப் பெரிய சம்பளம்.

சினிமாவில் நடிக்க ஆரம்பிச்ச சில வருஷங்களிலேயே, ஜானகிராம் தெருவில் 22 ஆயிரம் ரூபாய்க்கு மூணு கிரவுண்டு நிலத்துல ஒரு வீட்டை வாங்கினேன். சினிமாவில் நான் நடிக்கவும் அவ்வளவு சம்பாதிக்கவும் காரணமா இருந்தது அண்ணன் எஸ்.எஸ்.ராஜேந்திரன்தான். அண்ணன் இறந்தது, என் கூடப்பிறந்த அண்ணனையே இழந்துட்டது மாதிரி இருக்கு!”

கல்யாணம் எனும் கசப்பு!

”என்கூட நாடகங்களில் வில்லனாக நடிச்சவர் எஸ்.எம்.ராமநாதன். எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தை நான் காதல்னு நம்பினேன். திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெச்சு அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எனக்காகச் சாட்சிக் கையெழுத்துப் போட்டது நான் அண்ணனா நினைச்ச சக நடிகர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. அப்புறம் நான் கர்ப்பமாகி ஒன்பது மாதம் வரைக்கும் நாடகத்தில் நடிச்சுட்டு, பிள்ளை பெத்துக்க என் சொந்த ஊரான பள்ளத்தூருக்கு வந்துட்டேன்.

குழந்தை பிறந்து 16-வது நாள் என்னை வந்து பார்த்தார் என் கணவர். அதுக்கு அப்புறம் அவர் என்னைப் பார்க்கவே இல்லை. என்னையும் பிள்ளையையும் காப்பாத்திக்க நான் சென்னை வந்து சினிமாவில் நடிக்க ஆரம்பிச்ச சமயம், விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

என் திருமண வாழ்க்கை எனக்கு மிகப் பெரிய ஏமாற்றம். அப்புறம் அவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டார். அவரோட ரெண்டாவது சம்சாரம் யார் தெரியுமா? எங்க கல்யாணத்துல எனக்காகச் சாட்சிக் கையெழுத்து போட்டாரே எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி… அவரோட தங்கச்சி. நானும் எல்லாத்தையும் மறந்துட்டு அம்மாவை மட்டும் துணைக்கு வெச்சுட்டு வாழப் பழகிட்டேன்.

நடிப்பு, நடிப்பு, நடிப்புன்னே ஓடிட்டு இருந்தேன். என் கணவர் இறந்த தகவல் கிடைச்சப்போ, நானும் பூபதியும் கிளம்பினோம். அப்போ என் அம்மா, ‘அந்த ஆளோட என்ன பெருசா வாழ்ந்து கிழிச்ச… இப்போ எதுக்குப் பார்க்கப்போற?’னு கேட்டாங்க.

ஆனா, எனக்கு மனசு கேட்கலை. நான் போனேன். பூபதியை அவர் வளர்க்கவும் இல்லை; படிக்கவும் வைக்கலை. அவரோட ரெண்டாவது சம்சாரத்துக்குக் குழந்தையே கிடையாது. அவருக்கு பூபதிதான் கொள்ளி போட்டான். அவருக்குக் கொள்ளிபோட ஒரு மகனைப் பெத்துக் கொடுத்தேன். அதுதான் எனக்கும் என் புருஷனுக்குமான ஒரே பந்தம்.”

என் அம்மா!

”என் அப்பா, என் அம்மாவின் தங்கச்சியையும் கட்டிக்கிட்டார். அப்பாவும் சின்னம்மாவும் சேர்ந்து என் அம்மாவைத் துரத்திவிட்டுட்டாங்க. நான் பத்து மாசக் குழந்தையா இருந்தப்போ, என் அம்மா ராமாமிர்தம் என்னைத் தூக்கிட்டு பள்ளத்தூருக்கு வந்துட்டாங்க. வீட்டு வேலை செஞ்சு என்னைப் படிக்கவெச்சாங்க. ஒரு கட்டத்துல அவங்களுக்கு உடம்பு முடியாமப்போச்சு. இல்லைன்னா என்னை இன்னும் நல்லா படிக்கவெச்சிருப்பாங்க. அம்மா கடைசி வரை என் கூடவேதான் இருந்தாங்க.

ஒருநாள் நான் அதிகாலையில் ஷூட்டிங் கிளம்பும்போது அம்மா இறந்துட்டாங்க. ‘இனிமே என்ன பண்ணப்போறோம்?’னு நான் திக்பிரமை பிடிச்ச மாதிரி உட்கார்ந்துட்டேன். அம்மா இறந்த தகவல் தெரியவும் சிவாஜி அண்ணன் உடனே கிளம்பிவந்துட்டார்.

அவருக்கு என்னைப் பத்தி, என் குடும்ப வாழ்க்கை பத்தி எல்லாமே நல்லா தெரியும். ‘இங்க பாரும்மா… நீ எதுக்கும் கவலைப்படாதே. எப்போ எடுக்கிறதுனு மட்டும் சொல்லு. மத்ததை நான் பார்த்துக்கிறேன்’னு சொல்லிட்டுப் போய் ஒரு வெண்பட்டுப் புடவையும், துளசி மாலையும் வாங்கிட்டு வந்தார். தலைப்பாகை கட்டிக்கிட்டு என் அம்மாவைக் குளிப்பாட்டி பட்டுப்புடவை போத்தி அம்மாவுக்கு ஒரு மகனா, எனக்கு அண்ணனா நின்னு எல்லா காரியங்களையும் செஞ்சார். அந்தவகையில் எங்க அம்மாவுக்கு அது நல்ல சாவு.”

உடல் நலம்!

”கொஞ்சம் நாள், உடம்புக்கு ரொம்ப முடியாம இருந்துச்சுப்பா. 15 வயசுல இருந்து ஓடிட்டே இருந்தேன்ல… அதான் இப்போ ஓய்வு தேடுது. எத்தனை வருஷ ஓட்டம்… என்னா உழைப்பு. அப்பப்பா! இப்போ நினைச்சா எனக்கே ஆச்சர்யமா இருக்கு. என் ரெண்டு மூட்டுகளும் தேஞ்சிருச்சு. அதனால செயற்கை மூட்டுகள் பொருத்தியிருக்காங்க. மத்தபடி நான் நல்லாத்தான் இருக்கேன். இன்னும் நிறைய நடிக்கணும்னுதான் ஆசை. எங்கே..?!

என்கூட ‘மணிமகுடம்’ நாடகத்துல சம்பத்குமாரினு ஒருத்தங்க நடிச்சாங்க. இப்போ அவங்க பெங்களூருவுல இருக்காங்க. சென்னை வந்தா என்னைப் பார்த்துட்டுப் போவாங்க. நடிகை லட்சுமி அடிக்கடி போன்ல விசாரிப்பாங்க, எம்.என்.ராஜம் அடிக்கடி பேசுவாங்க.

சிவகுமார் அப்பப்போ நேர்ல வந்து விசாரிச்சுட்டுப் போவார். அவங்க எல்லாரும் அந்தக் காலத்துல பழக்கமானவங்க. இப்ப உள்ளவங்களுக்கு என்னை வந்து பார்க்கணும்னு எந்த அவசியமும் இல்லையே…

அண்ணா, கலைஞர், என்.டி.ஆர்., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா…னு ஐந்து முதலமைச்சர்களோடும், நான்கு தலைமுறை நடிகர்களோடும் நடிச்சிருக்கேன்னு நானா என் கதையை என்கிட்டயே சொல்லிட்டு இருக்கேன் தம்பி. சினிமாவில் காமெடி காட்சிகள்ல மட்டுமே நடிச்ச எனக்கு, நிஜ வாழ்க்கையில அது மருந்துக்குக்கூட இல்லாம போச்சு!” – சிரித்துக்கொண்டேதான் சொல்கிறார் ஆச்சி!

===== CASTRO RAHUL=====
284 Views
கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ பீ எல் இன் போது பொலிவூட் நடிகர் ஷாருக்கான் மைதானத்தில் வைத்து ரகளையில் ஈடு பட்டமைக்காக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன இதன் மூலம் அவருக்கு அந்த மைதானத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அவர் மீது இன்னுமொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, .அந்த சந்தர்ப்பத்தில் அவர் நடந்த விதம் பற்றி ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டிருந்தன கெட்ட வார்த்தைகளை அதிகமாக பிரயோகித்தார் என்று அவரின் ரசிகர்கள் கூட இதை விமர்சித்த்திருந்தார்கள். அவர் அந்த வார்த்தைகளை பயன் படுத்திய போது அதிகளவான சிறுவர்கள் இருந்தார்கள் என்று இப்போது மீண்டும் எல்லோரின் விமர்சனங்களுக்கு தள்ளப்பட்டு தவிக்கிறார்.

இந்நிலையில் அந்த சம்பவத்தின் போது குழந்தைகளின் முன்னால் தகாத வார்த்தைகளை பயன் படுத்தியது குறித்து ஷாருக்கான் மீது அமித் மரு என்ற சமூக ஆய்வாளர் மகாராஷ்டிரா மாநில குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்தார். இதன் பின்னர் குழந்தைகள் முன்னால் தகாத வார்த்தைகளை கூறியமைக்காக வழக்கு தொடருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
231 Views

குறுகிய காலத்திலேயே பலரின் மனதை கொள்ளைகொண்ட நாயகன் சிவகார்த்திகேயன் பலகுரல் கலைஞனாக தொலைக்காட்சியில் கால் பதித்து தொகுப்பாளராகி நாயகனாக அவதாரம் பெற்றவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே நகைச்சுவை நாயகனாக வலம் வந்த கார்த்தி Action நாயகனாக நடித்து வெளிவந்த படம் காக்கிசட்டை.
இந்த படத்தின் வெற்றியை ரசிகர்களோடு பகிந்துகொள்ள எண்ணிய சிவா நேற்று டிவிட்டரில் ரசிகர்களோடு சாட்டிங் மூலம் கலந்துரையாடினார் இதோ உங்களுக்காக அந்த chat

 

கேள்வி:ரஜினிமுருகன் படத்திற்கு பிறகு உங்களின் அடுத்த படம் என்ன?

பதில்: இன்னமும் நான் அது குறித்து முடிவு செய்யவில்லை.

 

கேள்வி: சமீப வருடங்களாகவே தமிழ் நாடுகேரளாகர்நாடகா என பிசி வகுப்பு மக்களிடம் அதிகம் பேசப்படுவது நீங்கள் மட்டுமே என்ன செய்கிறீர்கள் அதற்கு?

பதில்: எனக்கு தெரிந்து பார்வையாளர்கள் என்னிடம் சிறப்பான இணைப்பில் உள்ளனர். பலரும் என்னை சகோதரனாக, நண்பனாக உணர்கீறார்கள். மேலும் காமெடியும் மற்றொரு காரணம்.

 

கேள்வி: தனுஷ் படங்களில் உங்களுக்கு பிடித்த படம்

பதில்: புதுபேட்டை தான் தனுஷ் படத்தில் என் மனம் கவர்ந்த படம்.

 

கேள்வி: பாண்டிராஜ் தானா உங்களுக்கு கே.பி?

பதில்: தேசிய விருது பெற்ற இயக்குநர் . அவரது படத்தில் எனக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது பெருமை.

 

கேள்வி: விஜய் சேதுபதியை உங்களுக்கு போட்டியாக நினைக்கிறீர்களாஅவரது படங்களில் உங்களுக்கு பிடித்த படம்?

பதில்: எனக்கு போட்டிகளில் நம்பிக்கை இல்லை. அவரது படங்களில் பீட்சா எனக்கு பிடிக்கும்.

 

கேள்வி: அஜித்தை சந்தித்த தருணம் பற்றி?

பதில்: அவருடன் 5 மணி நேரம் பேசினேன். வாழ்க்கைக்கு தேவையான தன்னம்பிக்கை கிடைத்தது போல் உணர்கிறேன்.

 

கேள்வி: விஜய்யை பற்றி உங்கள் கருத்து?

பதில்: அவர் Complete Entertainer

 

கேள்வி:உங்கள் வாழ்கையின் சிறந்த தருணம் எது?

பதில்:விஜய் சார் இடமிருந்து பெற்ற விருது அதை அப்பாவுக்கு சமரப்பணமாக்கியது.

 

கேள்வி:இந்த புகழின் காரணமாக நீங்க இழந்த ஒன்று

பதில்:எதுவும் இல்லை

 

கேள்வி:உங்களை Action நாயகனாக பார்ப்பதற்கு சந்தோஷம். இருப்பினும் உங்களின் நேரத்திற்கேற்ற நகைச்சுவையை மிகவும் விரும்புகின்றோம் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

பதில்: "ரஜினி முருகன்" முழு நகைச்சுவை திரைப்படம்

 

கேள்வி:அனிருத்தின் இசை பற்றி?

பதில்:Energetic

 

கேள்வி:தனுஷின் போன் நம்பர எப்படி save பண்ணிருக்கிங்க?

பதில்:Genius

 

கேள்வி:விஜய் சேதுபதியின் தயாரிப்பில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால்?

பதில்:நல்ல கதையாக இருந்தால் நான் தயார்

 

கேள்வி:நகைச்சுவையா அதிரடியா பிடிக்கும்

பதில்:நகைச்சுவை

கேள்வி:ஸ்ருதிஹாசன் பற்றி இரண்டு வார்த்தை?

பதில்:எளிமையானவர் சிறந்தவர்   

கேள்வி:தலைவர் படத்த எப்போ இருந்து முதல் நாள் முதல் ஷோ பாக்க ஆரம்பிச்சிங்க?

பதில்:தளபதி படத்துல இருந்து

 கேள்வி:நீங்க எப்போ வில்லன் கதாபாத்திரத்தில நடிக்க போறீங்க?

பதில்:முதல் நான் சிறந்த நடிகனாகணும் பிறகு பார்ப்போம்

 

என்று இதுபோல் பல கேள்விகளுக்கு மனதில் தோன்றிய பதில்களை கூறினார்.

 

-சிவகர்த்திகேயனின் டிவிட்டரில் இருந்து சுட்டது வர்ஷி-

289 Views

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டியின் போது வழங்கப்பட்ட நடுவர்களின் தீர்ப்புகள் சில பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

இப்போட்டியில் பங்களாதேஷ் அணி தோல்வியடைந்தமைக்கு காரணம் நடுவர்களின் தீர்ப்பே என பங்களாதேஷ் ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


இந்நிலையில் பங்களாதேஷ் நாட்டின் பிரதமர் ஷேய்க் ஹசீனாவும் தமது அணியின் தோல்வி தொடர்பில் நடுவர்களை சாடியுள்ளார்.


மெல்பேர்னில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் பங்களாதேஷ் அணி வீரர்கள் மற்றும் அணியின் முகாமைத்துவத்தைச் சேர்ந்த சிலரும் கலந்துகொண்டுள்ளனர்.


இதன்போது அங்கு அழைப்பை மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் பிரதமர் ஹசினா, வீரர்களிடம் உரையாற்றியுள்ளார்.


இதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது; " நடுவர்கள் தவறான தீர்ப்பை வழங்காமல் இருந்திருந்தால் நாம் வெற்றி பெற்றிருப்போம்.இன்ஷா அல்லா, பங்களாதேஷ் எதிர்காலத்தில் வெற்றிபெறும். பங்களாதேஷ் ஒருநாள் உலக சாம்பியன்களாகும்" என்றார்.


தொடரில் சிறப்பாக செயற்பட்ட வீரர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் வீரர்களை கவலையடைய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.


மேலும் நாங்கள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டோம் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் எனவே கவலைப்பட தேவையில்லையெனவும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை பங்களாதேஷ் பிரதமரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தலைவரொருவர் கிரிக்கெட் தொடர்பில் குறிப்பாக நடுவரின் தீர்ப்பு குறித்து கருத்து வெளியிடுவதானது ராஜதந்திர ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்றல்லவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

240 Views
 தன்னிகரில்லா  தலைவன் இத் தரணிக்கு விடை கொடுத்த நாள் இந்நாள் தன் தேசத்திற்கு ஒளியேற்றிய ஓர் சுடர்  ஒளியிழந்த நாள் இந்நாள்

ஆம் லீ குவான் யூ ! ..

ஆத்மார்த்தமாய் தன் தேசத்தை நேசித்த இணையற்ற பெரும் தலைவன், நேரிய பார்வை நிமிர்ந்த நடை பகை வரினும் மனம் தளராது  தன் தேசத்தின் மான்பிற்க்காகவும் எழுச்சிக்காகவும் போராடிய நற்குணம் இவை தான் இந்த தலைவனின் அடையாளங்கள்

1923 செப்டம்பர் 16 ஓர் குழந்தையின் ஜனனம் ஆனால் அந்தக் குழந்தை உலகத்தையே தன் பக்கம் ஈர்க்கப் போகும் மாபெரும் தலைவனாக மாறப் போகின்றான் என்று அப்போது யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள் ஆனாலும் மாற்றம் ஒன்றே தன் தேசத்தின் ஏற்றத்திற்கு தேவை என்பதை உணர்ந்தவராய் எத்தனையோ விமர்சனங்களையும் தாண்டி தன் இலக்கு நோக்கி நடை பயின்றார்,ஈற்றில் வெற்றியும் கண்டார் ..கடும் போக்கு வாதி என பலராலும் அறியப்பட்டாலும் கனிவான உள்ளம் கொண்ட லீ நெகிழ்வுப் போக்குடன் காலத்திற்கு தேவையான கொள்கைகளை வகுத்து காலத்தால் அழியாத தலைவனாகவும் மாறி விட்டார் ..
..பிரித்தானியாவின் காலனித்துவ பிடிக்குள் இருந்து விடுபட கடுமையாக போராடிய லீ குவான் மலேசியாவின் கரங்களில் இருந்து விடுபடவும் கரம் கொடுத்தார்  மூன்று தாசாப்ததிற்கு மேலாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த இத் தலைவனின் சரிதம் அவர் வாழ்ந்த காலத்தின் பிரதிபலிப்பு. இயற்கை வளங்கள் பெரிதளவில் இல்லா தேசத்தை உலகின் முன் பெருமை படுத்தி ஒரு சாதாரண துறைமுகம் என்ற நிலையில் இருந்து சிங்கபூரினை பிரகாசிக்கும் வர்த்தக மையமாக உருவாக்கி  ஒரு அபரிதமான மாற்றத்தையும்  ஏற்படுத்தினார்.
          இத்தகைய மக்கள் தலைவன் பங்குனி திங்கள் 23 ஆம் நாள் இப் பாரிட்க்கு விடை கொடுத்தாலும் காலம் உள்ள வரை காவியத் தலைவனாக மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் ..............

305 Views
அட்டக்கத்தி மூலம், தமிழ் சினிமாவில் காலடி பதித்தவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் தனது தேர்ந்த நடிப்பால் பல படங்களை கையகப்படுத்தினார். அழகான பக்கத்து வீட்டுப் பொண்ணு போல வந்த நடிகைக்கு,இப்பொழுது நல்ல வரவேற்பை நம்ம சினிமா வழங்கியுள்ளது.

இப்பொழுது, நந்திதாவின் கைகளில் 4 படங்கள் இருப்பதாகவும், இன்னொரு பெயரிடப்படதாத படத்தில் நடிகர் சிவாவுடன் இணைந்து நகைச்சுவையில் வெளுத்து வாங்கியுள்ளதாகவும் சொல்கிறார் அம்மணி.

இவற்றோடு, அறிமுக இயக்குனர் திலீப் சுப்புராயன் இயக்கத்தில் அஞ்சல எனும் படத்தில் நடித்து வரும் நிலையில், இப்படத்தில் மதுரையைச் சேர்ந்த பெண்ணாக நடித்து அசத்தியுள்ளார் இந்த அட்டக்கத்தி நந்திதா. இப்பிடியே முன்னேறினால் நல்லது அம்மணி.

-கோடம்பாக்கக் குருவி-
603 Views
நீண்டகால இடைவெளிக்கு பின்னதாக நம்ம பிரஷாந்த் தனது தந்தை தியாகராஜன் தயாரிப்பில் நடித்துவரும் படம் சாகசம். மிகப்பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார் தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை மீண்டும் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் எனது அவரது நோக்கம்.

தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் படமான ஹுலாஜி எனும் படத்தின் ரீமேக் தான் இந்தப்படம். இதில் பிரசாந்த், அபிதா, அபி சரவணன், நாசர், துளசி, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை அருண்விஜய் வர்மா இயக்குகிறார். இசைப் பணியை எஸ்.தமன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், படப்பிடிப்புக்கள் நிறைவடைந்துள்ளதாகவும், இன்னும் இரண்டு பாடல்கள் மாத்திரமே மீதமுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. அத்தோடு இந்தப் பாடல்களை ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் எடுக்கவுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

பிரஷாந்துடன் ஒரு பாடல் காட்சியில் அவுஸ்திரேலிய நடிகை ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. அப்போ பிரஷாந்துடன் அவுஸ்திரேலிய நடிகையும் இணைந்து சாகசம் செய்யவுள்ளார்கள் என்பது பொருத்தமானது.

-கோடம்பாக்கக் குருவி-
256 Views
சிம்புவின் சில படங்களுக்கு ஏதாவது சிக்கல்கள் வந்து சின்னாபின்னமாகி, பிறகு அதிலிருந்து மீண்டெழுந்து வருவதற்கிடையில், போதுமென்றாகி விடும். இப்பொழுதும் அதே நிலையே அவரது வாழு படத்துக்கும் !
படம் அந்தா இந்தாவென்று இன்னும் வெளியிடப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.

இந்நிலையில், தனது அடுத்தடுத்த படங்களை கவனிக்க ஆரம்பித்து விட்டார் சிம்பு. கௌதம் மேனன் இயக்கம் அச்சம் என்பது மடமையடா மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் இன்னுமொரு படத்திலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் இந்த விரல் நடிகர்.

சரி, படத்தில தானே நடிக்கப் போறாரு.. அதில என்னைய்யா உனக்குன்னு நீங்க பார்க்கிறது புரியுது. விசயமே இனித்தான்பா. அதாவது இந்த செல்வராகவன் இயக்கம் படத்தில் சிம்புவுக்கு ஜோடிக்காக நடிக்க நம்ம நடிகைகளிடையில் கடும் போட்டியும் பனிப்போரும் நிலவி வருகிறது.

த்ரிஷா, டாப்ஷி, எமி ஜாக்சன், இந்தி நடிகை ஹீமா குரோஷி போன்றவர்கள் பரிசீலிக்கபடும் பெயர்கள். இதில் யாரை செல்வராகவன் தேர்வு செய்யப்போகிறார் என்பதை சிம்பு தொடக்கம் இந்த அத்தனை நட்சத்திரங்களுடைய இரசிகர்களும் எதிர்பார்த்துள்ளார்கள்.

யாருக்கு அடுத்து சிம்புவோடு இணைந்து கிசுகிசுக்கப்படப் போகும் வாய்ப்போ? சாரி, இணைந்து நடிக்கப்போகும் வாய்ப்போ?

-கோடம்பாக்கக் குருவி-
329 Views
அரசவையில் விகடகவி என்று ஒருவர் இருப்பார். புத்திசாலித்தனமான ஜோக்குகள் சொல்லி அவையை ரிலாக்ஸ் செய்வதுதான் இவரது பணி.

ஒட்டு மொத்த தமிழகம் அல்லது உலகத் தமிழ் சினிமா ரசிகர்களின்  விகடகவியாக இப்போது செயல்படுகிறவர், பவர் ஸ்டார் என அறியப்படும் நடிகர் சீனிவாசன். புத்திசாலித்தனம் கொஞ்சம் குறைவு என்றாலும் சிரிப்புக்கு குறைவில்லை.
 
விழா மேடைகளில் கருத்துரை சொல்லி வந்த பவர் ஸ்டார் இப்போது ட்விட்டரிலும் புகுந்திருக்கிறார். அவரது சமீபத்திய டார்கெட் சிம்பு.
 
”தம்பி சிம்பு, வாலுனு பெயர் வச்சதுனாலதான் படம் ரிலீஸ் ஆகலை போல. பேசாம தலன்னு பெயரை சேஞ்ச் பண்ணிடுங்களேன்” என்று கலாய்த்திருக்கிறார்.
 
பவர் ஸ்டார் கலாய்க்கிற அளவுக்கு சிம்புவின் நிலைமை ஆகியிருக்கிறது.

ஒரு படத்தை ஒப்புக் கொண்டு மூன்று படங்களை கமிட் செய்யும் சிம்புவின் கதகளி போக்கு தொடர்ந்தால் பவர் ஸ்டார் மட்டுமில்லை, தமிழ்நாட்டின் நண்டும் குஞ்சும் அவரை கலாய்க்கும்.  :P

======CASTRO RAHUL====
235 Views

 விரைவில் வெளியாகவுள்ள அனுஷ்காவின் ருத்ரமா தேவி படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படத்தை எடுத்துள்ளனர்.

அனுஷ்கா ருத்ரமா ராணி வேடத்தில் நடித்துள்ளார். ராணா, அல்லு அர்ஜுன், பிரகாஷ்ராஜ், சுமன், நித்யாமேனன், கத்ரினா திரேசா போன்றோரும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். குணசேகர் இயக்கி உள்ளார்.

13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ருத்ரமாதேவி ராணியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இதற்காக அனுஷ்கா வாள் சண்டை, குதிரை சவாரி பயிற்சிகள் பெற்று இப்படத்தில் நடிக்கிறார்.

 

இதன் பாடல் வெளியீட்டு விழாவை இரண்டு இடங்களில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதில் பங்கேற்கும்படி நடிகர், நடிகைகள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

சரித்திர கதை என்பதால் இப்படத்துக்கு அரசின் கேளிக்கை வரி விலக்கு பெற படக்குழுவினர் முயற்சிக்கின்றனர். படத்தின் இயக்குனர் குணசேகர் தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர்ராவை நேரில் சந்தித்து பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அப்போது கேளிக்கை வரி விலக்கு பெறுவது பற்றியும் பேசியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் படத்தின் ட்ரெய்லரை காட்டினார். அதை பார்த்ததும் சந்திரசேகரராவ், கோபமடைந்தாராம். அதில் தெலுங்கானா மாநிலம் உதயமானதற்கு எதிரான வசனங்கள் இடம் பற்று இருந்ததாக கூறப்படுகிறது.

இதுவே சந்திரசேகரராவை ஆத்திரப்பட வைத்ததாம். அதனை நேரிலேயே டைரக்டர் குணசேகரிடம் தெரிவித்துவிட்டார். இதனால் ருத்ரமா தேவி படத்துக்கு சிக்கல் எற்பட்டு உள்ளது. வரி விலக்கும் கிடைக்காது என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்.

====CASTRO RAHUL====

222 Views
பாடலாசியரியர் சினேகன் நாயகனாக நடிக்கும் சரித்திர படம், ராஜராஜ சோழனின் போர்வாள். இளையராஜா இசையமைக்கும் இந்தப் படம் சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

 
போர்வாள் துருப்பிடித்துவிட்டது, இனி அவ்வளவுதான் என கோடம்பாக்கம் பரவலாக பேசிவரும் நிலையில், அதனை மறுத்துள்ளார் சினேகன்.

 
படத்தின் ஒவ்வொரு பகுதியையும் பார்த்துப் பார்த்து உருவாக்கி வருகிறேnம். சில முன்னணி நடிகர்களின் கால்ஷீட் எதிர்பார்த்தபடி கிரைடக்கவில்லை. அதனால்தான் 3 மாதங்களாக படப்பிடிப்பு நடக்கவில்லை.

வரும் ஏப்ரலில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி இந்த வருட இறுதிக்குள் படத்தை திரைக்கு கொண்டு வந்துவிடுவோம் என்று தெரிவித்தார்.
 
ஆக, போர்வாள் இன்னும் ஷார்ப்பாகதான் இருக்கு.

====CASTRO RAHUL=====
278 Views

உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்டில் 200 ஓட்டங்களைக் கடந்தார்.

மேலும் இதன் மூலம் சாதனைகளையும் நிலைநாட்டினார்.

அவர் 152 பந்துகளில் 203 ஓட்டங்களைக் கடந்ததுடன், இப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 163 பந்துகளில் 237  ஓட்டங்களைப் பெற்றார். இதில் '24' நான்கு ஓட்டங்களும் , '11' ஆறு ஓட்டங்களும் அடங்குகின்றது.

இதன் மூலம் உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராக அவர் பதிவானார். அதுமட்டுமன்றி உலகக் கிண்ண போட்டியொன்றில் வீரரொருவர் பெற்ற அதிகூடிய ஓட்டம் இதுவாகும். 

இதுமட்டுமன்றி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதத்தைக் கடந்த முதல் நியூசிலாந்து வீரராக இவர் பதிவானார்.

237 Views
ஒரு படம் மூன்று காட்சிகள் ஓடினால், ஆஹா என்கிறார்கள். மூன்று நாட்கள் ஓடினால், அபாரம் என்கிறார்கள். 4 நாட்கள் ஓடினால், வெற்றிப்படம் என்கிறார்கள். இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை என கவிஞர் வைரமுத்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சிவாஜி கணேஷன் நடிப்பில் வந்த வீரபாண்டிய கட்ட பொம்மன் திரைப்படம், 56 வருடங்களின் பின்னர் மீண்டும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதுப்பிக்கப்படுள்ளது. அதன் டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும்போதே வைரமுத்து இன்றைய சினிமாவின் நிலை குறித்து இவ்வாறு பேசினார்.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
356 Views
பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், விபத்துக்குள்ளாகி தற்போது ஓய்வில் இருக்கும் நடிகர் சசிகுமார், சம நேரத்திலேயே தனது அடுத்த படத்துக்கான கதையைக் கேட்டு ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜில்லா படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய நேசமணி என்பவர் இயக்குனராக மாறி இயக்கும் இப்படத்தில், குக்கூ பட நாயகி மாளவிகா நாயார் நாயகியாகிறார்.

விரைவில் தாரை தப்பட்டையை முடித்துக் கொடுத்துவிட்டு, இந்த பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் சசிகுமார்.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
264 Views
[1]      «      1662   |   1663   |   1664      »      [1703]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top