பேராசிரியை நிர்மலா தேவி பிணையில் விடுதலையாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறான முறையில் நடத்திய குற்றத்தில் கைது செய்யப்பட்டார். சுமார் 11 மாதங்களாக மதுரை மத்திய சிறையில் நிர்மலா தேவி சிறைவாசம் அனுபவித்து வந்தார். உயர்நீதிமன்றத்தின் தலையீட்டை அடுத்தே நிர்மலா தேவிக்கு பிணை வழங்கி விடுதலையாகியுள்ளார்.
இதனிடையே, நிர்மலா தேவி பிணையில் விடுதலையாகக் கூடாது என்பதற்காக, இந்திய அரசாங்கம் பல தடைகளை ஏற்படுத்தியதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிணை கி்டைத்து 10 நாட்களுக்கு பின்னரே நிர்மலா தேவி விடுதலையாகியுள்ளார். தொடர்ந்தும் வழக்கில் இருந்தும் நிர்மலா தேவி விடுதலையாவார் என, வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசியலின் சதி காரணமாகவே சுமார் 11 மாதங்களாக நிர்மலா தேவி சிறையில் அடைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.