Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
29
9 ஆண்டுகளாக அழியாத 'தேர்தல் மை' - வாக்களிக்க முடியாமல் தவிக்கும் மூதாட்டி !

SOORIYANFM GOSSIP - 9 ஆண்டுகளாக அழியாத 'தேர்தல் மை' - வாக்களிக்க முடியாமல் தவிக்கும் மூதாட்டி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

248 Views

9 ஆண்டுகளுக்கு முன்பு வாக்களிக்கும் போது கைவிரலில் பூசப்பட்ட ‘மை’ அழியாததால் 62 வயது மூதாட்டி இந்தியாவில் தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதை புறக்கணித்துள்ளார்.

தனது விரலில் பூசப்பட்ட மையை அழிப்பதற்காக இந்த மூதாட்டி பலமுறை முயற்சி செய்தும் அவரால் அதனை அழிக்க முடியவில்லை.

இந்தியாவின் கேரள மாநிலம், குருவாயூரப்பன் பகுதியை சேர்ந்த இந்த மூதாட்டி கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளார். அப்போது அவர் வாக்களித்ததன் ஆதாரமாக அவரது கையில் மை பூசப்பட்டுள்ளது.

ஆனால் பல வருடங்கள் கடந்தும் அந்த மை அவரது கையில் இருந்து அழியாமல் இருந்துள்ளதுடன் அதனை அழிப்பதற்காக மூதாட்டி பலமுறை முயற்சி செய்தும் அவரது முயற்சி பலனளிக்கவில்லை.

இதன் காரணமாக அவரால் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, இடம்பெற்ற எந்தத் தேர்தலிலும் வாக்களிக்க முடியாமல் போயுள்ளது. இந்த சம்பவம் குறித்து தேர்தல் திணைக்கள அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்த போதிலும் அதை ஏற்க மறுத்த அதிகாரிகள் அவரை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக மனமுடைந்த முதாட்டி , அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க மாட்டேன் என்று கூறி தேர்தலை புறக்கணித்துள்ளார்.

தற்போது இந்த சம்பவம் குறித்து தேர்தல் ஆணையகத்திடம் முறையிடப்பட்டுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் காலங்களில் பூசப்படும் மையானது இவ்வாறு பல வருடங்கள் அழியாமல் இருந்ததாக இதுவரை எந்த சம்பவமும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், தோல் மருத்துவர்களும் அந்தக் கருத்தையே தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கான உண்மைக்காரணத்தை கண்டறிய, மூதாட்டிக்கு தோல் பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top