நடிகர் கடந்த சில காலங்களாகவே பெரும் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.
இந்நிலையில் விஷால், தனது அம்மாவின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன்மூலம், திறமை இருந்தும் கல்விக்காக கஷ்டப்படும் குழந்தைகள், மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
அந்த வரிசையில் திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பல கிராமங்களிலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வருவதை அறிந்த விஷால், தனது அறக்கட்டளையின் மூலம் அந்த மாணவர்கள் சுலபமாக பள்ளிக்கூடம் வருவதற்கு 35 இரு சக்கர மிதிவண்டிகளை இலவசமாக வழங்கியுள்ளார்.
விஷாலே நேரடியாக வந்து அந்த குழந்தைகளுக்கு தனது கையால் மிதிவண்டிகளை வழங்கினார். மிதி வண்டிகளை பெற்றுக் கொண்ட மாணவர்கள் அனைவரும் விஷாலுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும், பள்ளி நிர்வாகமும் விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளது.