கொழும்பு வெள்ளவத்தையில் அண்மையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த இளைஞனின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றுள்ளன.
திம்புள்ள- பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை, கிறேக்கிலி தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதான ராமர் நிரோஷன், குறித்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்திருந்தார்.
முன்னதாக மீட்கும் பணிகளில் தாமதம் நிலவுவதாக அவர்களது உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்த நிலையிலேயே அவரது சடலம் இடிபாடுகளுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.