இந்தியாவின் உத்ரபிரதேஷில் மனைவியின் மருத்துவ செலவிற்காக குழந்தையை விற்க முயன்ற சம்பவம், அனைவரையும் அதிர்வடைய வைத்துள்ளது.
உத்ரபிரதேஷ் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ரவிந்த் பன்ஜாரா - சுக்தேவி தம்பதிகள். இவர்களுக்கு ஒரு வயதில் ஜானு என்ற குழந்தையும், 4 வயதில் ரோஷினி குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் சுக்தேவி மீண்டும் கர்ப்பமானார்.
தற்போது 7 வது மாதம் நடைபெற்று வரும் நிலையில், அவரது உடல் நிலை உரிய ஆரோக்கியத்தோடு இல்லை.
இதன் காரணமாக அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த வைத்தியர்கள்,
அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், சிகிச்சைக்காக ரத்தம் ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளனர்.
வறுமையில் உள்ள இவர்களால் சிகிச்சைக்கான ரத்தத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. உடனடியாக மனைவியின்
சிகிச்சைக்கு பணமில்லாததால், ரவிந்த் பன்ஜாரா
வேறு வழியின்றி தமது குழந்தையை 25,000 இந்திய ரூபாய்க்கு விற்க முடிவுசெய்துள்ளார்.
இந்தத் தகவல் காவற்துறைக்கு சென்றுள்ளது. உடனடியாக சம்பவத்தில் தலையிட்ட காவற்துறையினர், சுக்தேவிக்கான சிகிச்சைக்கான முழுச் செலவையும் தாங்களே ஏற்றுக்கொள்வதாக திர்வா காவல்துறை தெரிவித்துள்ளது.
மனித நேயம் மிக்க காவற்துறையின் செயற்பாட்டை அனைவரும் பாராட்டி வருவதுடன், மனைவியின் சிகிச்சைக்காக பெற்ற குழந்தையை விற்பனை செய்யும் அளவிற்கு செல்வது ஏற்றுகொள்ள முடியாத ஒன்று என பலரும் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.