தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில், சாலையோரம் குழந்தை ஒன்று அழுவது போன்ற சத்தம் கேட்டடுள்ளது. இதனையடுத்து அந்த வழியே நடந்து சென்று கொண்டிருந்த காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
தகவல் அறிந்த காவல்துறையினர், அந்த இடத்திற்கு விரைந்து மழைநீர் வடிகாலில் வீசப்பட்ட குழந்தை, ஆழத்தில் இருந்து அழுது கொண்டிருந்ததை பார்வையுற்றனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் மீட்புப்படையினருக்கு அறிவித்தனர். பின்னர் அங்கு விரைந்து வந்த மீட்புப்படையினர், சுத்தியல் மற்றும் உளி கொண்டு குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், வடிகாலை மெதுவாக தோண்டினர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த பச்சிளம் குழந்தையை பாதுகாப்பாக படையினர் மீட்டனர்.
மீட்கப்பட்ட குழந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதன் ஆரோக்கியம் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.