இந்தோனேஷியாவின் ஹூவாங் எரிமலை அருகே நின்று, செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண் எரிமலைக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தோனேஷியாவில் இருக்கும் 130 எரிமலைகளில் மிகவும் முக்கியமானதும், இயற்கை அதிசயங்களும் நிறைந்த எரிமலையாக இஜென் எரிமலை காணப்படுகின்றது. கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள இந்த எரிமலையைக் காண, நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றார்கள்.
இந்தநிலையில், சீனாவைச் சேர்ந்த 31 வயதான பெண் ஒருவர் குறித்த எரிமலைக்குச் சுற்றுலா சென்றுள்ள நிலையில், நீல நிறத்தில் காட்சியளித்த எரிமலையை பார்த்து பிரம்மிப்பில் ஆழ்ந்த அவர், எரிமலைக்கு மிக அருகில் நின்று செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார்.
இதற்காக அவர் எரிமலையை நெருங்கிச் சென்ற சந்தர்ப்பத்தில் அதனை அவதானித்த சுற்றுலா வழிகாட்டி, அவரை அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாது குறித்த பெண் எரிமலையின் அருகில் சென்றபோது, பலமான காற்று வீசியதில் பள்ளத்தாக்கிற்குள் தூக்கி வீசப்பட்டு சுமார் 246 அடி பள்ளத்திற்குள் வீழ்ந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, 2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு அவரின் உடல் மீட்கப்பட்டு தற்போது சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.