தற்போது தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறக்கும் இயக்குநர்களில் ஒருவர் நெல்சன். இவர் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் Doctor , Beast , ஜெயிலர் என பல முக்கிய திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். இவர் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதி வருகிறார்.
இந்த நிலையில் இயக்குநர் நெல்சன், தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் . அவர் சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் அந்த அறிக்கையில் "சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குவது என்னுடைய கனவாக இருந்தது. அந்த வகையில் என்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய விடயத்தை உற்சாகமாகப் பகிர்ந்து கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.