தமிழ்த் திரை உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம்வருபவர் நடிகர் சியான் விக்ரம். அவரது அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பு அவருக்கென தனி இரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளது.
சியான் விக்ரம் தற்போது இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
‘தங்கலான்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் சியான் 62 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் மற்றும் துசாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதற்கு G.V.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் குறித்த திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று இன்று வெளியாகவுள்ளது. இதனை சியான் விக்ரம் தனது எக்ஸ் தள பக்கத்தில் நேற்று போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.