சுந்தர்.சி இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான 'அரண்மனை' திரைப்படம் வெற்றியடைந்ததால் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின.
இந்நிலையில் தற்போது இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் 'அரண்மனை பாகம் 4' உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் முதல் மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இப்பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் இவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அரண்மனை பாகம் 4, இம்மாதம் 26ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் , இத்திரைப்படத்தின் ‘அச்சச்சோ' என்ற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.