17 ஆவது IPL தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டி இன்று இரவு 7:30 மணியளவில் லக்னோவில் இடம்பெறவுள்ளது. கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தாங்கள் விளையாடிய முதல் போட்டியில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது.
ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியினர் தங்களது முதல் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்ததுடன் அடுத்த போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இந்த போட்டி அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.