அதனைத் தொடர்ந்து கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், முதல் வசந்தம், ஒரு கைதியின் டைரி, புதுமைப் பெண், தென்றலே என்னை தொடு, திருப்பாச்சி உள்பட பல்வேறு திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடியுள்ளார்.
சென்னை அடையாறு பகுதியில் வசித்துவந்த இவர்,கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று இரவு அவர் தனது 69 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
இவரது மறைவிற்கு இசையமைப்பாளர்கள்,திரைத்துறையினர் மற்றும் இரசிகர்கள் என,பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.