இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், தமன்னா மற்றும் ராஷி கண்ணா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'அரண்மனை 4' திரைப்படம் கடந்த 3 ஆம் திகதி உலக அளவில் வெளியானது.
கடந்த 2014 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் 'அரண்மனை' திரைப்படம் வெளியாகி, பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.
இதனைத்தொடர்ந்து 'அரண்மனை' திரைப்படத்தின் 2ஆம் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி இரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களைத் தொடர்ந்து அரண்மனை 3 வெளியானது.
இதேவேளை ‘அரண்மனை 4’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, சிறப்பான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்திற்கு Hip Hop ஆதி இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், 'அரண்மனை 4' வெளிவந்து இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் 16 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.