Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
02
இலகுவாக செய்திடலாம் ரவா உப்புமா!

SooriyanFM Gossip - இலகுவாக செய்திடலாம் ரவா உப்புமா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

255 Views
காலை நேர உணவை உட்கொள்வது நம் அனைவருக்கும் மிக முக்கியமானதொன்றாகும்.காலை நேரத்தில், குறித்த நேரத்தில் அலுவலகம் செல்லவேண்டும் என்பதற்காகவும்,அதேபோல் மாணவர்கள் பாடசாலைக்கு குறித்த நேரத்திற்கு முன் செல்லவேண்டும் என்பதற்காகவும் வேகமாக சமைத்துக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம், நமக்கு மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.

பொதுவாக காலை உணவாக எந்த உணவைத் தயாரிப்பது,அதை அனைவருக்கும் பிடித்தவாறு எவ்வாறு சமைப்பது என்பதில்தான் பலருக்கு குழப்பநிலை ஏற்படுகின்றது.இந்த யோசனையிலேயே, நமக்கு காலை உணவைத் தயாரிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

மிகவும் வேகமாகவும்,இலகுவாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் தயாரிக்கக்கூடிய உணவாக ரவா உப்புமா காணப்படுகின்றது.

இந்த உணவானது அதிக செலவினை ஏற்படுத்தாத பொருட்களை கொண்டமைந்ததாக காணப்படுகின்றது.அதனால் இப்போதெல்லாம் பலரது வீட்டில் காலை உணவாக இருப்பது ரவா உப்புமா மட்டுமே!

ரவா உப்புமா செய்யத் தேவையான பொருட்கள்
1 கப் ரவை
1 பெரிய வெங்காயம்
கறிவேப்பிலை - ஒரு கைபிடியளவு
1 பச்சை மிளகாய்
சிறிய துண்டு இஞ்சி (சிறிது சிறிதாக நறுக்கியது)
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
1 ஸ்பூன் கடலைப்பருப்பு
2 குழிக்கரண்டி எண்ணெய்
5 கஜூ
சிறிதளவு பெருங்காயத்தூள்
உப்பு-தேவையான அளவு
சீனி - சிறிதளவு
3 கப்- தண்ணீர்
கொத்தமல்லி-சிறிதளவு
கரட் - 1 (சிறிது சிறிதாக நறுக்கியது)
போஞ்சி - 4 (சிறிது சிறிதாக நறுக்கியது)


முதலில் வாணலியில் ரவையை வறுத்து தனியாக வேறொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகை விட்டு தாளிக்கவும்.அதன்பின்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும்.

தாளிக்கும் போதே வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய இஞ்சியைச் சேர்த்து வதக்கவும்.வதக்கியபின்,சிறிது சிறிதாக நறுக்கிய கரட் மற்றும் போஞ்சியை விட்டு நன்கு வதக்கவும். அதன் பின்பு கஜூவை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.

எந்தவித காரணத்தைக்கொண்டும் அனைத்துவிதமான தாளிக்கும் பொருட்களையும், ஒரே நேரத்தில் விட்டு தாளிக்கக்கூடாது.ஒன்றன்பின் ஒன்றாக விட்டுத்தான் வதக்க வேண்டும்.இதனைக் கவனத்தில் கொள்ளவும்.

கஜூ விட்டு தாளித்த கலவையினுள், 3 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.பின்னர் தண்ணீர் கொதிக்கும் போது, சிறிதளவு சீனி சேர்க்கவும். பின்னர் அடுப்பை குறைந்த அளவு தீயில் வைத்து ரவையை ஒரு கையால் கொட்டி இன்னொரு கையால் கிளறவும். பின்னர் சிறிது நேரம் மூடி வைக்கவும்.

உப்புமா நன்றாக வெந்து வந்ததும் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கிளறி வீட்டில் உள்ளவர்களுக்கு சூடாக பரிமாறவும்.

இலகுவான முறையில் இப்போது ரவா உப்புமா தயார்!

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top