கொரோனா நோய்க்கான ஒரு அறிகுறியாக தோல் அழற்சி சொல்லப்பட்டது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள குழந்தைகளுக்கு தோல் அழற்சி ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் இதன் காரணமாக சுமார் 100 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற ஐரோப்பிய நாடுகளிலும் தோலில் வீக்கமடைந்து சிவந்து போதல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஆபத்தான இந்த தொற்று குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் அதுகுறித்து கண்காணிக்குமாறு பிரிட்டனின் தேசிய மருத்துவ சேவை அதன் மருத்துவர்களுக்கு ஏப்ரல் மாதமே அறிவுறுத்தியிருந்தது.
அதிகமான காய்ச்சல், தோல் சிவப்பது, கண்கள் சிவப்பது, வீக்கம் மற்றும் உடல் வலி ஆகிய அறிகுறிகள் குழந்தைகளுக்கு இருப்பின் பெற்றோர் உடனடியாக வைத்தியர்களிடம் அழைத்து செல்லவேண்டும் .