அமீரகத்தின் வடக்கு பகுதியில்அமைந்துள்ள பிரதான நகரமான ராசல் கைமாவில் ஜெபல் ஜைஸ் எனும் மலைப்பகுதி அண்மித்துள்ளது.சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான குறித்த இந்த மலைப்பகுதியானது சுமார் 6 ஆயிரத்து 500 அடி உயரமானதாகும்.
சீன ஆய்வகத்தில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என சீன வைராலஜிஸ்ட் லி மெங்-யான் தெரிவித்துள்ளார்.இதற்கான அறிவியல் சான்றுகள் தன்னிடம் உள்ளதாகவும் கொரோனா வைரஸ் குறித்து சீன அதிகாரிகளிடம் எச்சரித்தபோது, அதனை அவர்கள் கேட்கவில்லை. சீன அரசு தொடர்ந்து மவுனமாக இருந்ததால் கடந்தாண்டு ஹாங்காங்கிலிருந்து அமெரிக்காவிற்கு தான் குடிபெயர்ந்ததாக கூறியுள்ளார்.
பொலிவூட்டில் நடிக நடிகையர்களிடம் போதைப்பொருள் புழக்கம் சம்பந்தமான தகவல்கள் வெளியானதுடன், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடனான தொடர்புகள் குறித்தும் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மல்லுவூட் எனப்படும் மலையாளத் திரையுலகிலும் போதைப்பொருள் பாவனை தொடர்பான செய்திகள் வெளிக்கிளம்பியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 5-ம் திகதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் திகதி மோசமடைந்தது.
வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் இறுதிகட்ட பணியில் உள்ளதாக பல நாடுகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக இங்கிலாந்து நாட்டின் தடுப்பூசி, சீனா நாட்டின் தடுப்பூசிகள் உள்ளிட்ட பல தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக அத்தோடு நடிகராக வலம் வருபவர் சுந்தர் சி. குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவரான சுந்தர் சி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
உலக நாயகன் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து பாரதிராஜா இயக்கத்தில் 1978-ல் வெளியான படம் சிகப்பு ரோஜாக்கள். ஆண்களை மயக்கி ஆசை வலையில் வீழ்த்தும் பெண்களை தேடிப்பிடித்து கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைக்கும் சைக்கோ கொலையாளி பற்றிய கதை.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 92,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48 லட்சத்தை தாண்டியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் இருந்து வருகிறது.