கென்யா தலைநகரான நைரோபி நோக்கி புறப்பட்டு சென்ற எத்தியோப்பியா நாட்டு போயிங் 737 ரக விமானம் விபத்தாகியதில் பலியாகியவர்களில் ''ஷிகா கார்க்'' எனும் ஐநா ஆலோசகர் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் இதனை உறுதி செய்துள்ளார். அத்துடன் இறந்தவர்கள் தொடர்பிலான விபரங்களை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் வெளியிட்டார். மேலும், ஷிகா கார்க், நைரோபியில் நடைபெறும் ஐநா கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றபோது விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி எத்தியோப்பியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் கூறி உள்ளேன் என்றும் என சுஷ்மா குறிப்பிட்டார். நேற்று காலை 149 பயணிகளுடன் நைரோபி நோக்கி புறப்பட்டு சென்ற விமானம், வானில் பறக்க ஆரம்பித்து 6 நிமிடங்களுக்குள் கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
பின்னர் தேடுதல் மேற்கொண்டதில், தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கே உள்ள பிஷோஃப்டு என்ற நகரில் விமானம் விழுந்து கிடப்பது கண்டறியப்பட்டது. இதில் பயணித்த எவரும் உயிர் பிழைக்காத நிலையில் 149 பயணிகள், விமானிகள் உள்ளிட்ட 8 விமானப் பணியாளர்கள் என மொத்தமாக 157 பேர் உயிரிழந்தனர்.
இவர்களில் , எத்தியோப்பியாவை சேர்ந்தவர்கள் 9 பேரும், கனடாவைச் சேர்ந்த 18 பேரும் , சீனா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த தலா 8 பேரும், பிரான்ஸ், பிரிட்டனை சேர்ந்த தலா 7பேரும் , எகிப்து 6, நெதர்லாந்து, இந்தியா மற்றும் சுலோவாக்கியாவை சேர்ந்த தலா 4 பேரும் பலியாகியுள்ளார்