சிறப்பு பயிற்சியாளரை வைத்து, நடிகை அமலா பால் யோகாசனம் கற்று வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து நடிகை அமலா பால், தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
கஷ்டமான வேலைகளை செய்யும்போது, தலைகீழாக நின்றாலும் நடக்காது என்று கூறுவதை அறிந்து வைத்துள்ளோம்.
ஆனால் தலைகீழாக நிற்பது உடலுக்கு எவ்வளவு முக்கியமானது, பயன் அளிக்க கூடியது என்பதை நான் இப்போது உணர்ந்து இருக்கிறேன்.
யோகாவில் தலைகீழாக நின்று சிரசாசனம் போடுவது, மிகவும் கஷ்டமானது. எனினும் என்னால் தற்போது அது முடிந்துள்ளது.
இப்போது எனக்கு யாருடைய உதவியும் இல்லாமல் தலைகீழாக நின்று சிரசாசனம் போட முடிகிறது.
இந்த ஆசனம் உடலை வலுவாக்கும். எல்லோரும் அவசியம் இதைச் செய்ய வேண்டும் என அமலா பால் கூறியுள்ளார்.