இந்தியாவில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள அரச தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் ஒருவர், நேரலையில் செய்தி வாசித்துக்கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்தார்.
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் கூறுகையில் “செய்தி வாசிக்கும் போது எனக்கு இரத்த அழுத்தம் குறைந்தது. செய்தி வாசிக்கும் முன்னரே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இருப்பினும் சிறிதளவு நீர் அருந்தியதன் பின்னரே செய்தி வாசிக்கச் சென்றேன்” என்று கூறியுள்ளார்.
அத்துடன், அதிகமானவர்கள் நான் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளனர். அனைவருக்கும் எனது நன்றிகள். ஆனால் மக்கள் இந்த வெப்பநிலையை கருத்திற்கொண்டு உடலுக்குத் தேவையான போஷாக்கான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸுக்கும் மேல் கடுமையான வெப்பம் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.