ஆஃப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் 12 பேர், ஹெலிகொப்டர் விபத்தில் பலியாகியுள்ளனர்.
மேலும் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக ஆப்கன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் வடக்கே அமைந்துள்ள பால்க் பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த ஹெலிகோப்டேரரில் வெடிபொருட்கள் ஏற்றி சென்றுள்ள நிலையில், அவை ஒன்றுடன் ஒன்று மோதிய நிலையிலேயே இந்த வேதனை மிகு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் பலியாகிய வீரர்களின் உடலங்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதால், அவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.