தாய்லாந்து நாட்டில் ஃபேஸ்புக் நிறுவனம் பத்து லட்சம் பேர் இருந்த ஒரு குழுவுக்கு தடை விதித்து இருக்கிறது.
தாய்லாந்து நாட்டின் முடியாட்சி குறித்து விவாதித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தாய்லாந்து அரசு இதில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து இந்த தடையை விதித்தது ஃபேஸ்புக் நிறுவனம்.
தாய்லாந்தில் அரசுக்கு எதிராக பெரும் திரளாக மக்கள் போராடி வருகின்றனர். முடியாட்சியில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கை.
தாய்லாந்து அரசிடம் இருந்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்ளச் சட்ட நடவடிக்கைக்கு தாங்களும் தயாராகி வருவதாக தெரிவித்திருக்கிறது அந்த நிறுவனம்.
தாய்லாந்தில் முடியாட்சியை விமர்சிப்பது சட்ட விரோதமானது.
"Royalist Marketplace" எனும் ஃபேஸ்புக் குழுவில் ஏறத்தாழ 10 லட்சம் பேர் உள்ள இந்த தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.