நேற்று மாலை கூடிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை உறுதிப்படுத்தியதாக தெரியவருகின்றது.
மேற்படி கூட்டத்தில் பங்குபற்றிய கட்சித்தலைவர் ஒருவரே இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி தலமையில் இக்கூட்டம் நடைபெற்றது. சுதந்திரக் கூட்டமைப்பு 14 கட்சிகளை உள்ளடக்கியது. இதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 58.
இந்நிலையில் , சுதந்திரக் கட்சி மற்றும் சுதந்திரக் கூட்டமைப்பு அல்லாத வேறொரு கட்சியில் மஹிந்த போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
மேலும் இது தொடர்பான அறிவிப்பு எந்நேரத்திலும் வெளியாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.